திருவாரூர், ஜூன் 23- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக திருவா ரூர் அருகே உள்ள கூடூரில் சனி, ஞாயிறு தினங்களில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளா ளர் எம்.டி.கேசவராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்தி துவக்க உரையாற்றி னார். முதல் நாள் பயிலரங்கத்தில், விடுதலைப் போரில் இளைஞர்கள் என்ற தலைப்பில் ஆசிரியர் ஜெயசீலன், வாசிப்பும் சமூகமும் என்ற தலைப்பில் ஆசிரியர் ஆர்.பாக்கியம் ஆகியோர் கருத்துரையாற்றினர். இரண் டாம் நாள் அமர்வில், வீரம் செறிந்த கீழத்தஞ்சை என்ற தலைப்பில் ஆசிரியர் பி.சீனிவாசன், அறிவை அகண்டமாக்கு என்ற தலைப்பில் மு.சிவகுருநாதன், திருவாரூர் மாவட்டத்தில் வாலிபர் இயக்கம் என்ற தலைப்பில் அமைப்பின் மாவட்டச் செயலா ளர் ஏ.கே.வேலவன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். நிகழ்வில், தூத்துக்குடியில் மழை-வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் பேரிடர் பணி செய்த வாலிபர் சங்கத்தின் திருவாரூர் உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. பயிலரங்கத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டனர்.