திருவாரூர், ஆக.10 - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை கண்டித் தும், அவருக்கு ஆதரவாகவும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கெ டுத்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்ததில் பெரும் சந்தேகம் உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங் கேற்ற வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம் கொடுக்க வேண்டும். மோசடியான மல்யுத்த சம்மே ளனத்தை உடனே கலைத்துவிட்டு, புதிய சம்மேளனம் அமைக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருவாரூர் மாவட் டக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் எம். எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன், பொருளாளர் எம்.டி.கேசவ ராஜ், ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், திருக் கடையூர், ஆக்கூர் பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருக்கடையூரில் ஒன்றியத் தலைவர் ரஷ்யா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட் டத் தலைவர் ஐயப்பன், ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ், அமுல் காஸ்ட்ரோ, ராமச்சந்திரன், பிரவீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆக்கூரில் ஒன்றி யத் தலைவர் அனீஷ் ரஹ்மான் தலைமையில் நடந்த போராட்டத் தில் ஒன்றியச் செயலாளர் சபீர் அக மது, சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் மார்க்ஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.