districts

திருச்சி முக்கிய செய்திகள்

கதர் துணிகள்  சிறப்பு விற்பனை துவக்கம்

கரூர், அக்.16- கரூர் மாவட்டம் வெண்ண மலையில் உள்ள, கரூர் ஊராட்சி ஒன்றியக் குழு அலு வலகத்தில் தீபாவளி பண்டி கையையொட்டி சிறப்பு விற் பனை துவக்கப்பட்டது. கரூர்  கதர் தொழில் உதவி இயக்கு நர் சீனிவாசன் வரவேற்றார்.  அனைத்து அரசு ஊழியர் களுக்கும், பொதுமக்களுக்கும் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், ஒரு சில கதர் ரகங்களுக்கு 20 சதவீதமும் அரசு தள்ளுபடியாக வழங்கி வருகிறது.  முதல் விற்பனையை ஊராட்சி ஒன்றியக் குழு தலை வர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். அதனை வட்டார  வளர்ச்சி அலுவலர் விஜய லட்சுமி பெற்றுக் கொண்டார். இதில் விற்பனை நிலைய பொறுப்பாளர்கள் சந்தானம், கோபால் மற்றும் அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.

ஆக்கூரில் ஆட்சியர் ஆய்வு'

மயிலாடுதுறை, அக்.16 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டா ரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சி யில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கான்கிரீட் வீடு கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி புதனன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா, ஊராட்சி தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகன், ஒன்றிய பொறியாளர் முத்து மற்றும்  ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி செயலர், உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.

பருத்தி மறைமுக ஏலம்'

பாபநாசம், அக்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழகொட்டையூர் ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு மேற்பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 391 விவசாயிகள், 272 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.  கும்பகோணம், செம்ப னார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 5 வணிகர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டு, அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7,629, குறைந்தபட்சம் ரூ.5, 899, சராசரி ரூ.6,299 என விலை நிர்ணயித்தனர். பருத்தி யின் மதிப்பு ரூ.17 லட்சம்.

மாமன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது

தஞ்சாவூர், அக்.15-  தஞ்சாவூரில் திமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டிய இளை ஞரை காவல் துறையினர் திங்களன்று கைது செய்தனர். தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையைச் சேர்ந்தவர் எஸ்.விஜய் பாபு (42). திமுகவைச் சேர்ந்த இவர் 7 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். அப்பகுதியில் ஞாயிறன்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு  ஏற்பட்டது. இதை சமாதானப் படுத்துவதற்காக விஜய்பாபு சென்றார். அப்போது விஜய் பாபு, அவருடன் இருந்த காந்தி  என்ற மணிகண்டன், வீரராக வன், ஆனந்த் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.  காயமடைந்த 4 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்றனர். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து  அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவை (23) திங்க ளன்று கைது செய்தனர். மேலும்  ஒருவரை தேடி வருகின்றனர்.

கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தவில்லை சிறப்பு கூட்டம் நடத்த கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.15 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த 5  கிராம ஊராட்சிகளில் முறையாக கிராம  சபைக் கூட்டம் நடத்ததால், சிறப்பு  கிராம சபைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி  அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேட்ட னூர் ஊராட்சியைச் சேர்ந்த பதினெட்டாம் படி என்பவர், ஒக்கூர் ஊராட்சியைச் சேர்ந்த முருகரத்தினம், அமரடக்கி ஊராட்சியைச் சேர்ந்த லியோ, பொன் பேத்தி ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்த் பிரபு, பூவளூர் ஊராட்சியைச் சேர்ந்த காசிநாதன் ஆகியோர் தனித்தனியே தங்களின் மனுக்களை அளித்தனர். மேற்படி மனுக்களில், “கடந்த  அக்.2 அன்று அனைத்து கிராமங்களி லும் கிராம சபைக் கூட்டங்கள் நடை பெற்றபோது, எங்கள் ஊர்களிலும் நடந்தது. ஆனால், பொதுமக்கள் யாரும்  பங்கேற்கவில்லை. முறைப்படி 31 ஆவ ணங்கள் எதையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவில்லை. தீர்மானங் கள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், கூட்டம் நடந்ததாகக் கூறி கை யெழுத்திட்டுக் கொண்டனர். ஊராட்சி யின் வரவு-செலவுக் கணக்குகள் வைக்கப்படவில்லை. ஆன்லைனில் வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்த  போது அதில் பல முறைகேடுகள் தெரிய வருகின்றன. எனவே சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்தி, முறையாக வரவு செலவுக் கணக்குகளை வைத்து, ஆவ ணங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி மையம், குழு அமைப்பு

பாபநாசம், அக்.16 - தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை சார்பில் முதல மைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் சிறப்பு  திட்டத்தின்கீழ், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே  அம்மையகரம் கிராமத்தில் இயற்கை வேளாண் இடுபொ ருட்கள் உற்பத்தி மையம் மற்றும் குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் இயற்கை விவசாயி ஜார்ஜ் தலைமையில் 12 அங்கக விவசாயிகள் ஒருங்கிணைந்து இந்த மையம்  அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்குழு விவசாயி களுக்கு தேவையான ஜீவாமிர்தம், மீன் அமிலம், பூச்சி விரட்டி, பூண்டு இஞ்சி மிளகாய் கரைசல் ஆகியவை தயாரிக் கப்பட்டு, அவர்கள் வயலில் பயன்படுத்தி வருகின்றனர். இக்குழுவினர் தயாரிக்கும் இந்த இடுபொருட்களை மற்ற விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இவர்க ளின் உற்பத்தியை விரிவுபடுத்தி அதிக பரப்பளவில் அங்கக  விவசாயம் செய்யப்படும் நோக்கில் இந்த குழு செயல்பட  வேண்டும் என தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர்  (பொ) சுஜாதா விவசாயிகளை கேட்டுக் கொண்டார். அவர்க ளுக்கு தேவையான அங்கக இடுபொருட்களை மேலும் அதிக மான அளவு உற்பத்தி செய்திட அவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்திடுமாறு திருவையாறு உதவி இயக்குநர்  லதா, உதவி அலுவலர்கள் உமா பிரியா, இளந்திரையன் ஆகி யோரை கேட்டுக் கொண்டார்.

அதிக ஒலி எழுப்பும்  பட்டாசுகளை விற்கக் கூடாது! தீயணைப்பு அலுவலர் அறிவுறுத்தல்

தஞ்சாவூர், அக்.16 -  தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்தில் வெடி பொருள்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு சில்லரை விற்பனையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: பட்டாசு கடை வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். வெடிபொ ருள் விதிமுறைகளின்படி விற்பனை செய்யும் கடையின் அளவு  296 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிர்ணயம்  செய்த அளவுக்கு மேல் அதிக அளவு பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் பணிபுரி யும் ஊழியர்களுக்கு தீயணைப்பான் கருவிகளை இயக்க தெரிந்திருக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் (120 டெசிபலுக்கு மேல்) பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. தஞ்சாவூர் மாநகரில் ஏற்கனவே 60  நிரந்தர பட்டாசு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்ற னர். மேலும், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை  நடத்துவதற்கு 190-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரு கின்றன. உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது.  விதிமுறைகளின்படி பட்டாசு விற்பனை செய்து விபத்தில்லாத தீபாவளியை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் அக்.18,19-இல் பட்டமேற்பு விழா

கும்பகோணம், அக்.16 - கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 2024  அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய இருநாட்கள் பட்ட மேற்பு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் மாதவி தெரி விக்கையில், “கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி)யில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமேற்பு விழா  அக்.18 (வெள்ளிக்கிழமை) அன்றும், 2021 - 2022 ஆம் கல்வி யாண்டில் பயின்ற மாணவ, மாணவியர்களுக்குப் பட்டமேற்பு விழா அக்.19 (சனிக்கிழமை) அன்றும் நடைபெற  உள்ளன. பட்டம் பெறும் மாணவ, மாணவியர்கள் தவ றாது கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மூதாட்டிக்கு எம்எல்ஏ நிதியுதவி

தஞ்சாவூர், அக்.16 - தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறி, எம்எல்ஏ நிதியுதவி அளித்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம்,  குப்பத்தேவன் ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சின்னம்மா (75). இவர் தனது பேத்தி  சுமதி, சுமதியின் பிள்ளைகளான 10 ஆம் வகுப்பு படிக்கும்  ஆனந்தி, 7 ஆம் வகுப்பு படிக்கும் மோனிஷா, சுபாதேவி,  4 ஆம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் ஆகியோருடன் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வேயப்பட்ட குடிசை வீட்டில் வசித்து  வந்தார். இந்நிலையில், கடந்த திங்களன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, வீடு முற்றிலுமாக எரிந்து  நாசமானது. இதில் பள்ளிப்பாடப் புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை  உள்ளிட்ட ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகின. இது குறித்து தகவலறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் புதன்கிழமை பாதிக்கப்பட்ட மூதாட்டி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி  வழங்கினார். 

பருவமழை தொடங்கியது முன்னெச்சரிக்கை நடவடிக்கை  மேற்கொள்ள கவுன்சிலர்கள் கோரிக்கை

அரியலூர், அக்.16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக் குழு  சாதாரண  கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ரவி (எ) ரவிசங்கர் தலை மையில் நடைபெற்றது.  மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவது குறித்து பேசினர். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  அரசு துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் கட்டடங்களை பேரூராட்சி மற்றும் நகராட்சி வசம் ஒப்ப டைத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 பள்ளி களை, பேரூராட்சி  மற்றும் நகராட்சி வசம் ஒப்படைத்திடு வது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் அலு வலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில்  உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

மயிலாடுதுறை, அக்.16 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலு வலர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டதோடு உடல் நலத்திற்கு  கேடு விளைவிக்கிற ரசாயன வண்ணம் பூசப்பட்ட  உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் உணவு பாதுகாப்பு குறித்தும் தடை செய்யப்பட்ட பாலிதீன் மற்றும் குட்கா  உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை  செய்யக் கூடாது எனவும், மீறி விற்பனை செய்தால் கடை உரிமத்தை ரத்து செய்வது  மட்டுமின்றி, வழக்குப் பதிந்து கைது  செய்யப்படுவீர்கள் என கடை உரிமையா ளர்களிடம் அறிவுறுத்தினர். தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட  உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் பேரூ ராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ  மற்றும் பணியாளர்களால் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி, கண்காணிக்கப்படுகிறது.

கூடுதல் பொறுப்பு மையங்களின் சாவியை  ஒப்படைத்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, அக்.16 - ஊழியர் இல்லாமல் காலியாக உள்ள அங்கன்வாடி மையங்களின் சாவிகளையும், கைப்பேசிகளையும் கூடுதல் பொறுப்பு பார்க்கும் பணியாளர்கள் ஒப்படைக்கும் போராட்டம் புதுக்கோட்டையில் செவ்வா யன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1799 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் பணி யிடங்கள், 600-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள், 100-க்கும் மேற்பட்ட குறு  மையப் பணியாளர் பணியிடங்கள் காலியாக  உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை அரசு  நிரப்பாததால் ஒரு பணியாளர், கூடுதலாக 2 மையங்களையும் கவனித்துக் கொள்ளும் சூழல் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இத னால் ஊழியர்கள் கடும் மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடிய வில்லை. எனவே, கூடுதல் பொறுப்பாக பார்க்கும் மையங்களின் சாவிகளையும், அவற்றுக்கான கைப்பேசிகளையும் புதுக் கோட்டை மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித்  திட்ட அலுவலரிடம் அங்கன்வாடி பணியா ளர்கள் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி கண்டன  உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் (பொ) கே.எம்.ரேவதி, பொருளாளர் கே.சவரி யம்மாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைச் செயலாளர்கள் கே. ரெத்தினவேல், முகமதுகனி உள்ளிட்டோர் பேசினர்.