லயன்ஸ் சங்கம் துவக்க விழா
பாபநாசம், செப்.2 - பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் சங்கம், புதிய சங்கம் துவக்க விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பாபநாசம் லயன்ஸ் சங்கத் தலை வர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட ஆளு நர் சவரிராஜ் புதிய சங்கத்தை துவக்கி வைத் தார். மாவட்ட முதலாம் துணை ஆளுநர் மணி வண்ணன், சாசனத் தலை வராக தில்லைநாயகி, செயலராக திலகவதி, பொருளாளராக வசந்தி, நிர்வாக அலுவலராக மலர்க்கொடி உள்ளிட்ட நிர்வாகிகளை பணிய மர்த்தினார். புதிய உறுப்பினர் களை மாவட்ட இரண் டாம் துணை ஆளுநர் விஜயலெட்சுமி சங்கத் தில் இணைத்து வைத்தார். மாவட்டத் தலைவர் செல்வம் இரு சக்கர வாகன ஓட்டி களுக்கு ஹெல்மட், பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு மின் விசிறி, கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை, மலேசியாவிற்கு சிலம்பப் போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு பய ணச் செலவு உள்ளிட்ட சேவைத் திட்டங்களை வழங்கினார்.
எல்ஐசி உதய தினக் கூட்டம்
தஞ்சாவூர், செப்.2 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கிளைகளின் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தின் சார்பில், எல்ஐசி 68 ஆவது உதய தினத்தை யொட்டி, மதிய உணவு இடைவெளியில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிளைச் செயலாளர் பி.இளைய ராஜா எல்ஐசி பற்றி கூறி னார். லிகாய் முகவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.பூவ லிங்கம் சிறப்புரையாற்றி னார். சங்க உறுப்பி னர்கள் மற்றும் முக வர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
எல்.ஐ.சி காப்பீடு வார விழா தொடக்கம்
அரியலூர், செப்.2- அரியலூரிலுள்ள எல்.ஐ.சி கிளை அலு வலகத்தில் காப்பீடு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழச்செல்வி விழாவை தொடக்கி வைத்து, நுகர்வோர் சட்டத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத் துரைத்தார். விழா வுக்கு எல்.ஐ.சி அரிய லூர் கிளை முதுநிலை மேலாளர் பி.ஜெயபாலன் தலைமை வகித்து, எல். ஐ.சி-யின் செயல்பாடு கள், தற்போதைய காப்பீடு நிலவரங்கள் குறித்து பேசினார். நிர்வாக அலுவலர் கார்த்தி கேயன் முன்னிலை வகித் தார். முன்னதாக நிர்வாக அலுவலர் தமிழரசன் வர வேற்றார். நிர்வாக அலு வலர் ஜெயா நன்றி கூறி னார். செப்.7 அன்று நடை பெறும் விழாவில், ஊழி யர்கள் மற்றும் முகவர் களுக்கான பல்வேறு போட்டிகள், ரத்தான முகாம், பேரணி உள்ளிட் டவை நடத்தப்படு கின்றன.
‘போதையில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு பேரணி
அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், போதை பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி, அறந்தாங்கி முக்கிய விதிகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை வழியாக பேருந்து நிலையம் பின்புறம் வரை பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நைனா முகமது கல்லூரி முதல்வர் முகமது பாரூக் மற்றும் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சரவணன் மற்றும் மருத்துவர் தினேஷ்ராஜா, காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்ற உத்தரவை பெறலாம்
திருச்சிராப்பள்ளி, செப்.2 - திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் அரியமங்கலம் கோட்டத் தில் வருவாய் பதிவேடுகளில் உள்ள பதிவுகளை சரிப்படுத்தவும், இன்றைய நிலைக்கு வருவாய் பதிவேடுகளை மேம்படுத்தவும் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சி கிழக்கு விலாசத்தில் அமைந்துள்ள அரியமங்கலம் நகர நிலவரித் திட்டம் அலகு I (தரைதளம்) மற்றும் அரியமங்கலம் நகர நிலவரித்திட்டம் அலகு II (முதல்தளம்) அலுவலகத்தில் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சி யர் தலைமையில் வருவாய் பின்தொடர் பணி நடைபெற்று வருகிறது. பட்டா பெயர் மாற்றத்திற்கான விசாரணை அறிவிப்பு கடிதம் நில உடமைதாரர்களின் வீட்டிற்கே வந்து வழங்கப்ப டும். நில உடமைதாரர்கள் அவர்களின் உரிமையை நிலைநிறுத்து வதற்கான ஆவணங்களான கிரையப் பத்திரம், மூல பத்திரம், வில்லங்க சான்று ஆகியவைகளுடன் விசாரணை அறிவிப்பில் தெரிவித்துள்ள விசாரணை நாளன்று நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில உடைமைதாரர் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகளை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
பாபநாசம் ஒழுங்குமுறை கூடத்தில் எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை நல்ல விலைக்கு ஏலம்
பாபநாசம், செப்.2 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமை வகித்தார். இதில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி களான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபு ராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 462 விவசாயிகள் 64 மெ.டன் பருத்தியை விற்ப னைக்கு எடுத்து வந்தனர். இதில் கும்பகோணம், செம்ப னார்கோவில், பழனி, பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 9 வணிகர்கள் கலந்துகொண்டு, அதிகபட்சம் குவிண் டால் ஒன்றிற்கு ரூ.8399, குறைந்தபட்சம் ரூ. 6979, சராசரி ரூ.7580 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தில் ரத்தசாளி நெல் ரகம் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.4000-க்கும், தூயமல்லி நெல் ரகம் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.3000-க்கும் விற்பனையானது. எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் தரத்திற் கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது.
மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி
புதுக்கோட்டை, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே இம்னாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். சிசிடிவி கேமரா பொருத்தும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சுகந்தன் (10), புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் தனியாக டிவி பார்த்துக் கொண்டிருந்த சுகந்தன், டிவி பிளக்கை கழற்றி மாட்டும் போது அதன் வழியே எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. ஆபத் தான நிலையில் அக்கம் பக்தத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோ தனை செய்தபோது சுகந்தன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சொந்த நூலகங்களுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, செப்.2 - தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. சொந்த நூலகம் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தீவிர வாசகர்கள் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் trichylioffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவ ரிக்கோ அல்லது மாவட்ட நூலக அலுவலர், 144 மேலரண் சாலை, சிங்காரத்தோப்பு, திருச்சிராப்பள்ளி-8 என்ற முக வரிக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமோ விண்ணப் பங்களை சமர்ப்பிக்கலாம். விருது பெற விண்ணப்பிப்பவர்கள், பெயர், முகவரி, தொலைபேசி எண், நூல்களின் எண்ணிக்கை, அரியவகை நூல்களின் எண்ணிக்கை மற்றும் எந்த நாள் முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது போன்ற விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பாக பரா மரிக்கப்பட்டு வரும் ஒரு நூலகம் தேர்வு செய்யப்பட்டு, சொந்த நூலகத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் திருச்சி ராப்பள்ளியில் செப்.27-லிருந்து அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை, செப்.2 - புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 585 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மாற்றுத்திற னாளிகள் நலத் துறையின் சார்பில், 10 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.7,62,500 மதிப்பிலான பல்வேறு உதவி உப கரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி, கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
கரூர், செப்.2 - அரவக்குறிச்சி, கரூர் ஆகிய பகுதி களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட 9 ஆவது பேரவை கரூரில் நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் செவந்திலிங்கம் தலைமை வகித் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்ஜெயராம் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட இணைச் செயலாளர் ராமமூர்த்தி வர வேற்றார். மாவட்டச் செயலாளர் பால சுப்பிரமணி வேலையறிக்கையையும், பொரு ளாளர் ஆர்.சிவக்குமார் வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநி லச் செயலாளர் கே.இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.செல்வராசு நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும். சாலைப் பணி யாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெற ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.5200-20200, தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஆபத்து படி ஊதியத்தில் 10 சதவீதமும், சீருடை சலவைப் படியும் வழங்க வேண்டும். பணியின் போது இறந்த சாலைப் பணி யாளர் குடும்பத்தின் வாரிசுக்கு நெடுஞ் சாலை துறையில் பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள சாலை பணியாளர் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கரூர் வழியாக சென்னை செல்வ தற்கு பகலில் புதிய ரயில் இயக்க வேண்டும். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். அரவக்குறிச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.