புதுக்கோட்டை, நவ.12 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில், 10 நபர்களுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை, மாவட்ட ஆட்சியர் மு.அருணா திங்கள்கிழமை வழங்கினார். பின்னர் ஆட்சியர் பேசுகை யில், “புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள சீர்மரபினர் இன மக்களுக்கு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் இதுவரை 565 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 800 நபர்களுக்கு சீர்மரபினர் நல வாரிய உறுப்பி னர்களாக பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, செவ்வாயன்று 10 பே ருக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித் தொகைகள், இயற்கை மரண உதவித் தொகை, ஈமச் சடங்கு செலவிற்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, மூக்கு கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், மாதந்தோறும் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் சீர்மரபி னர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இத்தகைய நலத்திட்ட உதவி களை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சீர்மரபினரும் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்” என தெரி வித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.