கும்பகோணம், ஜூன் 21-
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி மாணவ-மாணவியர்கள் அறிந்து கொள்ளும் விதமாக யோகாசன செய்முறை பயிற்சி மற்றும் விளக்கங்கள் எடுத்துரைக்கப்பட்டு சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி யில் சூரிய நமஸ்காரம், தாடாசனா, விருச்சாசனா, பாத பத்மாசன, பத்மாசனம் போன்ற ஆசனங்களை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களும் செய்தனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் வீ.பாலமுரு கன் தலைமையில் யோகா பயிற்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி மனவளக்கலை மன்ற பேரா.அருள்மொழி கலந்து கொண்டார். பயிற்சியாளர் ராமசுப்பிரமணியன் மாணவர்களுக்கு யோகா பயிற்சி களை செய்து காண்பித்தார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்
திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் யோகா பயிற்சி நடைபெற்றது. துணைவேந்தர் பேரா.எம்கிருஷ்ணன் பேசினார். யோகா பயிற்றுவிப்பாளர் சு.பா.சரவணகுமார் வழிகாட்டு தலின்படி பங்கேற்பாளர்கள் தங்கள் யோகா பயிற்சி யை மேற்கொண்டனர். விழாவில் ஆயுஷ் அமைச்ச கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது யோகா நெறிமுறை களின்படி காலை 7 மணி முதல் 7.45 வரை யோகா பயிற்சி நடைபெற்றது. முன்னதாக உடற்கல்வி மற்றும் விளை யாட்டு துறை தலைவர் பேரா.த.மணிஅழகு வர வேற்றார். இத்துறையின் இணை பேரா.முனைவர் சு.ஜெய ராமன் நன்றி கூறினார்.