திருத்துறைப்பூண்டி, செப்.3- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், பொது மக்களுக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் நன்றி தெரி வித்தார். அப்போது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் எஸ். ராம லோகஈஸ்வரி ரகுராமன் நாடாளுமன்ற உறுப்பின ருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். பின்னர் புதிதாக ஆற்றங்கரையில் படித் துறை, அங்கன்வாடி கட்டடம், சுகாதார வளாக கட்டடம், சுடுகாடு மற்றும் உயர் கோபுர மின் விளக்கு ஆகிய அடிப்படை கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, நகர் மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், சிபிஎம் நகரச் செயலாளர் கோபு ஆகியோர் உடனிருந்தனர்.