மயிலாடுதுறை, பிப்.5 - மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 3 ஆவது நாள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல் வன் “வாசிப்பின் வாசல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறி யாளர் சி.பாலசுப்பிரமணியன், முது கலைத் தமிழாசிரியர் (ஓய்வு) நல்லா சிரியர் இரா.செல்வகுமார், பூம்புகார் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர்.ஜெ. கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றுகையில், “தமிழ்நாடு அரசு முன்னெடுக்கிற கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த பல முக்கியமான நடவடிக்கை களில், மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சியும் நல்லதொரு திட்டம். இதன்மூலம் பள்ளிகளிலேயே மாண வர்கள் மத்தியில் வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்காக, அவர்களு டைய மொழியிலேயே, முதற்கட்டமாக 50 சிறிய புத்தகங்களை உருவாக்கி, லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு புத்த கம், 2 பத்திரிகைகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. “தேன் சிட்டு”, “ஊஞ்சல்” உள்ளிட்ட பத்திரிகைகள் அரசுப் பள்ளி களில் இயங்கி கொண்டிருக்கின்றன. இதில் குழந்தைகள் எழுதுகிறார்கள். இதுபோன்ற அறிவுசார்ந்த நடவ டிக்கைகள், நம் சமூகத்தை நிரந்தர மான, முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். நம்பிக்கை சார்ந்து இயங்குவதை விட அறிவுசார்ந்து இயங்குவதுதான் சமூகத்தை முன்னேற்றமடையச் செய்யும். நீங்கள் ஒரு புத்தகத்தை படித்தால், அது உங்களை இன்னொரு புத்தகம் படிக்க அழைத்துச் செல்லும். ஒவ்வொரு புத்தகமும் அறிவின் வாசலை திறந்து வைக்கும்” என்றார்.