புதுக்கோட்டை, ஜூலை 12-
ஒவ்வொரு ஆண்டும், குடும்ப நலத்துறை சார்பாக ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினம் கடைப் படிக்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்திலிருந்து கொடிய சைத்து துவக்கி வைத்தார்.
சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பேரணி யில் பங்கேற்றனர். பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தி லிருந்து தொடங்கிய இப்பேரணி பழைய அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்தில் முடிவடைந்தது.
இணை இயக்குநர் (மருத்துவம் குடும்ப நலம்) (பொ) ரவி, மருத்து வக் கல்லூரி முதல்வர் (பொ) ஜி.ஏ. ராஜ்மோகன், துணை இயக்குநர்கள் அ.கோமதி (மருத்துவம்-குடும்ப நலம்), எஸ்.ராம்கணேஷ் (புதுக் கோட்டை), எம்.சிவகாமி (தொழு நோய்), மு.சிவசங்கரி (காசநோய்), மக்கள் கல்வி தகவல் அலுவலர் வே. சேகர், வட்டாட்சியர் விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப் பட்டது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநக ராட்சி ஆணையர் சரவணகுமார், சுகா தாரப் பணிகள் இணை இயக்குநர் மரு. கே.திலகம், துணை இயக்குனர் மரு. மலர்விழி, மாநகர நல அலுவலர் மரு. சுபாஷ் காந்தி மற்றும் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவிகள், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவி கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉத விக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.