districts

திருச்சி முக்கிய செய்திகள்

உலக அமைதி விழிப்புணர்வு பேரணி 

அறந்தாங்கி, ஆக.30 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும்  ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உலக அமைதி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது. அறந்தாங்கி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி, மீமிசல் கிங்ஸ் ரோட்டரி, அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி, அறந் தாங்கி ஃபிரண்ட்ஸ் ரோட்டரி ஆகிய சங்கங்கள்  இணைந்து உலக அமைதிக்கான விழிப்பு ணர்வு பேரணியை நடத்தின. அறந்தாங்கி தொ டக்க கல்வி மாவட்ட அலு வலர் சாந்தி தலைமை வகித்தார். அறந்தாங்கி கல்வி மாவட்ட அலு வலர் ஜெயந்தி கொடிய சைத்து பேரணியை துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கான ஜூனி யர் ரெட்கிராஸ் சொசைட்டி  மாணவ, மாணவிகள் உலக அமைதிக்கான முழக்கமிட்டு, பதாகை கள் ஏந்தி பேரணியாகச் சென்றனர்.  வெஸ்ட்லி பள்ளி வரை சென்று அங்கே  மாணவ-மாணவி யர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. போட்டியில் வெற்றி  பெற்ற மாணவ-மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

தொழில் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் தொழிலாளர் நலத்துறை உதவி  ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

தஞ்சாவூர், ஆக.30 - தஞ்சாவூர், செவ்வப்ப நாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் தெற்கு அலங்கத்தில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு, தொழில் உரிமம் புதுப்பிக்கவும், மின்னணு இயந்திர தராசு  புதுப்பித்து முத்திரை பெறுவதற்காகவும், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வா ளராக பணியாற்றிய ஜெயலெட்சுமி (64), தொழில் உரிமம் மற்றும் இயந்திரத் தராசு புதுப்பித்து முத்திரை வைத்துத்  தர 2,500 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அந்தோணிசாமி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்  அளித்தார். புகாரின் பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று ஜெயலெட்சுமி லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.  இவ்வழக்கு, கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, ஜெயலெட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய்  அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு அளித்தார். 

பரசலூர் திமுக அரசின் 2000 ஆவது கோவில் குடமுழுக்கு திருவிழா

மயிலாடுதுறை, ஆக.30 - மயிலாடுதுறை மாவட்டம், பரசலூரிலுள்ள தருமபுரம்  ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் திருக்கோ வில் குடமுழுக்கு திருவிழா வெள்ளியன்று நடைபெற்றது.  திமுக அரசு பொறுப்பேற்றபின் நடைபெற்ற இந்த 2000  ஆவது குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை  நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், இந்துசமய அறநிலை யத்துறை இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆதீனங்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை டிஎஸ்பி பேட்டி

பாபநாசம், ஆக.30 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் டி.எஸ்.பி-யாக முருக வேலு பதவி ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே திருச்சி மாநகர  குற்றப்பிரிவு உதவி ஆணையராக பணியாற்றியவர். பாப நாசத்தில் பணியாற்றிய டி.எஸ்.பி அசோக் சென்னை சிபிசிஐடி டி.எஸ்.பி.யாக பணிமாறுதலில் சென்றார். புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.எஸ்.பி முருகவேலு செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், “ஊரக உட்கோட்ட பகுதியில் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து போன்ற குற்றச் சம்பவங்க ளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். பாபநாசம், கபிஸ்தலம், அம்மாப்பேட்டை, அய்யம் பேட்டை, மெலட்டூர் ஆகிய காவல் சரகப் பகுதிகளில் தொடர்ந்து இரவு ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். திருட்டுச் சம்பவங்கள், செயின் பறிப்பு போன்ற குற்றங்கள்  நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தும், பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  ஊரக உட்கோட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப் பிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அனைத்து காவல்  சரகப் பகுதிகளிலும் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு  கூட்டம் நடத்தப்படும். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கையை தெரி விக்கலாம்” என்றார்.

கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அலுவலர்கள் உறுதி
சிபிஎம் போராட்டம் கைவிடப்பட்டது

தஞ்சாவூர், ஆக.30 -  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கல்யாணபுரம் 2 ஆம் சேத்தி கிராமத்தில், வீரசிங்கம்பேட்டை இள மாரியம்மன் கோவில் தெருவில் அடிப் படை வசதிகளை நிறைவேற்றக் கோரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட் சியர் தர்மராஜன் தலைமையில் சமா தானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அரசுத் தரப்பில் திருவையாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கல்யாணபுரம் 2 ஆம் சேத்தி ஊராட்சி மன்றத் தலைவர், மின்வாரிய ஆய்வா ளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில், “கலைஞர் கனவு இல்லத் திட்டம் மூலம் வழங்கப்படும் வீடு களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்ட பட்டியலின்படி, முன்னு ரிமை அடிப்படையில் வீடு கட்டித் தரப்படும். அங்கன்வாடி மையம் மற்றும் தெருக்கள் போன்ற பொது இடங்களில் துப்புரவு பணியாளர்கள் தினம்தோறும் குப்பைகளை அகற்ற வும், பொதுக் கழிப்பிடத்தில் செப்டிக்  டேங்க் சரி செய்து தரப்படும் என வும், பழுதடைந்துள்ள மின் கம்பி களை சரி செய்யவும், ஒளிராத தெரு விளக்குகளை ஒளிரச் செய்யவும், மயானத்திற்கு செல்லும் பாதையிலும், பொதுக் கழிப்பறையிலும் மின்விளக்கு  வசதி செய்து தரப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.  மேலும், இளமாரியம்மன் கோவில் தெருவில் போடப்பட்ட தார்ச் சாலையை அலுவலர்கள் மூலம் ஆய்வு  செய்து சரிசெய்யப்படும். இனிவரும் காலங்களில் கிராம சபைக் கூட்டம் முறையாக அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் விளம்பரம் செய்யப்படும்.   இளமாரியம்மன் கோவில் தெரு வில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க இடம் இல்லை என்பதால், ஆதி திராவிடர் நலத்துறை மூலமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டு மனைப்  பட்டா வழங்கப்படும்” என அரசு அதிகா ரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  இதையேற்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.

பாண்டிபத்திரம் கிராமத்தில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, ஆக.30 - புதுக்கோட்டை மாட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டி பத்திரம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் ஆவணி மாத திருவிழாவை யொட்டி பாரிவள்ளல் இளைஞர் மன்றத்தால் 18 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடை பெற்றது. இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு ஆகிய  3 பிரிவுகளில் போட்டி நடந்தது. பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 10  மாட்டு வண்டிகளும், சின்னமாடு பிரிவில்  25 மாட்டு  வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டியில் தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற  மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் பங்கேற் றன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளில்  11 பேருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை  தொடக்க வேளாண் சங்கம் ரூ.7.96 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர், ஆக.30 - தஞ்சாவூர் மாவட்டம் கடம்பங்குடி, ஐம்பது மேல்நகரத்தைச் சேர்ந்த விவசாயி கள் பலரும், கடந்த 2017–18 ஆம் ஆண்டு, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில்  பயிர் இன்சூரன்ஸ் செய்து இருந்தனர். இதில், விவசாயிகள் இளமுருகன், செல்லப் பொண்ணு, துரைராஜ், சுப்பிரமணியன், சிதம்பரநாதன், நாராயணசாமி, இந்திரா, கண்மணி, மதியழகன், சுதாகர், பால முருகன் ஆகிய 11 விவசாயிகள், கடந்த 2019  ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர்  குறைதீர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர் ந்தனர். இவ்வழக்கு தஞ்சாவூர் நுகர்வோர் குறை தீர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கரூர் மாவட்ட குறை தீர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கை, நுகர்வோர் குறைதீர் நீதி மன்ற தலைவர் பாரி, உறுப்பினர் ரத்தின சாமி ஆகியோர் விசாரித்தனர்.  இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, விவசாயிகளுக்கு நிவாரணமாக 57,375 ரூபாயும்,  சேவை குறைபாட்டால் புகார் தாரர்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுத் தொகை யாக 5 ஆயிரமும் என 72,375 ரூபாயை தலா  11 விவசாயிகளுக்கும் 7.96 லட்சம் ரூபாயை  வழங்க உத்தரவிட்டது.   இதற்கான ஆணையை வியாழக்கிழமை தஞ்சாவூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தில், வழக்குரைஞர் வெ.ஜீவக்குமார் தலை மையில், விவசாயிகள் வந்து பெற்றுக் கொண்டனர்.