districts

img

உலக பாரம்பரிய வாரம்: தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், நவ.20 -  தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழு மம் சார்பில், உலக பாரம்பரிய வாரத்தை  முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரு கின்றன. இதனொரு பகுதியாக தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அரண்மனை வளாகம் வரை பாரம்பரிய விழிப்பு ணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து  துவக்கி வைத்தார். பேரணியில் பெரி யார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் புனித வளனார் பொறி யியல் கல்லூரியை சார்ந்த 200 மாண வர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன.  பின்னர் அவர்கள் தஞ்சாவூர் சங்கீத  மஹாலில் நடைபெற்று வரும் தமிழக  நடுக்கல் மரபு கண்காட்சியை பார்வை யிட்டனர். செவ்வாயன்று தஞ்சாவூர் பாரம்பரியம் என்ற தலைப்பில் சரஸ் வதி மகால் நூலகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.