புதுக்கோட்டை, ஆக.2 -
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், ‘உலக தாய்ப்பால் வார விழா’ விழிப்புணர்வு பேரணியை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெரிச ரம்யா புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.