தஞ்சாவூர், ஆக.10-
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த மூத்தாக்குறிச்சி புதிய ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 48). கூலித்தொழிலாளி யான இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், வைத் தீஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று காலை 11 மணியளவில் மூத்தாக்குறிச்சி ரேஷன் கடை அருகில் உள்ள பொதுப்பணித்துறை வாய்க் காலில் 100 நாள் பணியில் அறிவழகன் வேலைபார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென கதண்டு அறிவழகனை கடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைத்தேனீ கடித்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியது.