தஞ்சாவூர், மார்ச் 20 - திண்டுக்கல் அருகே மரத்தால் செய்யப்பட்ட நினைவுத் தூணை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறையின் முது கலைத் தொல்லியல் மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கசவனம் பட்டி அருகே உள்ள கோனூரில் மார்ச் 14 அன்று கள ஆய்வு செய்த னர். அப்போது, துறை மாணவி மௌனிகாஸ்ரீ அடையாளப் படுத்திய நடுகற்களையும், அங்கி ருந்த அரிய மரத்தால் செய்யப் பட்ட நினைவுத் தூணையும் துறை யின் தலைவர் வீ.செல்வகுமார், கௌரவ உதவிப் பேராசிரியர் செ. கௌரிசங்கர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கையில், “ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழைமையான இந்த மர நினைவுத்தூண் ஒரு வீர னின் நினைவாக உருவாக்கப் பட்டிருக்கலாம். இது தொடர்பான தெளிவான தகவல் தெரிய வில்லை என உள்ளூர் மக்கள் கூறு கின்றனர். சதுர வடிவில் 182 செ.மீ. உயரமும், 17.5 செ.மீ. அகலமும் உள்ள இத்தூண் நான்கு பக்கங்க ளிலும், 7 சதுர வடிவக் கட்டங் களில் பல சிற்பங்களைக் கொண்டு உள்ளது. ஆண், பெண் உருவங்கள், பசு, கிருஷ்ணர், வேணுகோபா லன், நின்ற வீரர்கள், பெண்கள் சிற்பம், பெண் தயிர் கடையும் காட்சி, குதிரை மீது வீரன், மேலே சந்திரன், சூரியன் ஆகிய சிற்பங் கள் அழகாகச் செதுக்கப்பட்டு உள்ளன. தெய்வம் என்பதை உணர்த்த மூலையில் முக்கோண வடிவ வேலைப்பாடு உள்ளது. தூணின் மேற்பகுதி கோயில் சிகரம், இதழ்கள், கலசத்துடன் வடிவமைக் கப்பட்டுள்ளது. இது மேய்ச்சல் சமூக வாழ்வைப் பிரதிபலிக்கிறது. தலைக் கொண்டை அமைப்பு பக்கவாட்டை நோக்கி நாயக்கர் காலத்தை ஒத்ததாகக் காணப்படு கிறது. இதை இவ்வூர் மக்கள் பொம்மம்மாள் தெய்வம் என வழி படுகின்றனர். இத்தூண் அமைந் துள்ள கோயில் அமைப்பு மரம், புற்களால் வேயப்பட்டு பழைமை மாறாமல் இருப்பது இதன் சிறப்பு. கோனூரில் பழங்கால ஊர் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் கிடைக்கின்றன. கோ னூர் என்ற ஊரின் பெயரும் மேய்ச்சல் சமூகத்தை நினைவூட்டு கிறது. இவ்வூரில் மாலைக்கோயில் எனப்படும் செட்டியார் கோயிலில் நினைவுத் தெய்வ உருவங்களும், தாதப்பன் என்று ஒரு நடுகல்லும் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ளது போன்ற மரத்தாலான நினைவுத் தூண்கள் அரிதானவை” என்றார்.