districts

img

ஐந்து தலைமுறையாக வசிக்கும் எங்களுக்கு மனைப் பட்டா வேண்டும்

கும்பகோணம், அக்.4 - கும்பகோணம் அருகே திருநாகேஸ் வரத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திரு நாகேஸ்வரம், சிவன் திருமஞ்சன வீதி, மணல்மேட்டு தெரு, பனந்தோப்பு, தெற்குத் தெரு, மேலத்தெரு, மேல மட விளாகம், கீழ மடவிளாகம், உப்பிலி யப்பன் கோவில், பழைய செட்டித் தெரு,  புளியந்தோப்பு, செட்டித் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் நான்கு-ஐந்து தலை முறையாக இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 15 ஆண்டு களாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.  இந்நிலையில், இவர்கள் வசிக்கும் குடியிருப்புகள் ராகு கோவில், உப்பிலி யப்பன் கோவில், செல்வ விநாயகர் கோவி லுக்குச் சொந்தமான இடங்கள் என்று கூறி, குடியிருப்பு வாசிகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.  இதற்கு அப்பகுதி பொதுமக்கள், ‘இந்த  இடத்தில் கோவில் கட்டுவதற்கு முன்பே நாங்க குடியேறி விட்டோம். இது எப்படி  கோவிலுக்குச் சொந்தமான இடமாகும்?.  நாங்கள் நான்கு-ஐந்து தலைமுறையாக  இருக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனை  பட்டா உடனே வழங்க வேண்டும். இல்லை யென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை  புறக்கணிப்போம். இங்கு வசிக்கும் இரண் டாயிரம் பேரும் குடும்ப அட்டை, வாக்காளர்  அட்டை, ஆதார் அட்டையை திரும்ப ஒப்ப டைப்போம்’ என தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத் துக்கு வந்த வட்டாட்சியர் வெங்கடேஸ் வரன், ‘அக்டோபர் 20 அன்றுக்குள், கோட் டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்படும்’ என தெரிவித்தார்.  எங்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கா விட்டால், மீண்டும் பல்வேறு கட்ட போராட் டங்கள் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  இப்பகுதியை சேர்ந்த பொதுமக்க ளுக்கு ஆதரவாக, திருநாகேஸ்வரம் கடை வீதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடை கள் அடைக்கப்பட்டன. திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், தலைமையில் காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.