பாபநாசம் ,ஆக. 21 ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சாலியமங்களம் அருகே இராராமுத்திரைக்கோட்டை ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கம் ஒன்றியத் தலைவரும் , ஒன்றியக் கவுன்சிலருமான வெற்றிச்செல்வி நம்பிராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.