districts

img

தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கிடக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் ,ஆக. 21     ரேஷன் கடைகளில்  அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தி  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சாலியமங்களம் அருகே  இராராமுத்திரைக்கோட்டை ரேஷன் கடை முன்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கம் ஒன்றியத் தலைவரும் , ஒன்றியக்  கவுன்சிலருமான வெற்றிச்செல்வி நம்பிராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.