கருர்,ஆக. 29 கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வு படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் ஒன்றிய குழு சார்பில் வேலாயுதம்பாளையம் கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பொதுமக்களிடம் கோரிக்கைகளை விளக்கி கையெழுத்து இயக்கமும் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புகளூர் நகர் மன்ற உறுப்பினர் இந்துமதி அரவிந்த் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சசிகலா, மாவட்ட செயலாளர் சுமதி ஆகி யோர் உரையாற்றினர். கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.