districts

img

அரசூரில் அதிகாரிகளைக் கண்டித்து பெண்கள் மறியல்

தஞ்சாவூர்,அக்.16–  தஞ்சாவூர் அருகே, அரசூர் கிரா மத்தில், சுமார் 323 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இதில், 277 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறப்படு கிறது. இதையடுத்து உரிமைத் தொகை வராத பெண்கள் மீண்டும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், அதிகாரிகளிடம் முறை யாக எந்த பதிலும் வரவில்லை. அத்துடன், மகளிர் உரிமைத் தொகை தகுதி இல்லாத நபர்களுக்கு பணம் வழங்குவதாகவும், தகுதி இருந்தும் அதிகாரிகளிடம் கேட்டால், தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி, தஞ்சாவூர் – அரியலூர் சாலையில், திங்கள்கிழமை காலை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவை யாறு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கள், எங்களுக்கு முறையான பதில் வரும் வரை சாலை மறியலைக் கைவிட மாட்டோம் என ஆதங்கத்து டன், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவையாறு வட்டாட்சியர் (பொறு‌ப்பு) நெடுஞ்செழியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய முறையில் விசாரணை நடத்தி உரிமைத்தொகை கிடைக்கவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித் தார். இதன் பேரில் அனைவரும் மறிலை கைவிட்டு கலைந்து சென்றனர்.