புதுக்கோட்டை, செப்.12 - பெண்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஆட்சிய ரிடம் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குன்னக்குரும்பி கிரா மம் மற்றும் கந்தர்வ கோட்டை அருகே வழியம் பட்டி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: குன்னத்தூர் கிராமத்தில் எங்கள் பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை யினால் பள்ளி மாணவ, மாண விகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந் தோம். எங்களின் தொடர்ச்சி யான போராட்டத்திற்குப் பிறகு கடந்த நான்கு மாதங் களாக கடை மூடப்பட்டிருந் தது. ஆனால், தற்போது மீண்டும் மதுக்கடை திறக்கப் பட்டுள்ளது. எனவே, திறக்கப் பட்ட கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி வித்திருந்தனர். அதேபோல், கந்தர்வ கோட்டை அருகே உள்ள வழியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கிரா மத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அரசு மது பானக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவி களும், பெண்களும் மது அருந்துவோரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்ற னர். எனவே, கடையை உட னடியாக அகற்ற வேண்டு மென வலியுறுத்தி மனு அளித்தனர்.