தஞ்சாவூர்,செப்.19 – தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வடசேரியை சேர்ந்தவர் உத்திரா பதி. இவரது அண்ணன் ராமமூர்த்தி, தம்பி சின்னப்பா. இந்நிலையில் ராமமூர்த்தி மனைவி பிரேமாவதி (50), சின்னப்பா ஆகியோர் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், பிரேமாவதி தூண்டுதல் பேரில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி தனது அண்ணன் உத்திராபதியிடம், சின்னப்பா சொத்து கேட்டு தகராறு செய்தார். அப்போது உத்திராபதியை வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து உத்திராபதியின் மகள் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் பாப்பா நாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சின்னப்பா மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த பிரேமாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து இரண்டாம் எதிரி யான பிரேமாவதி வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், புதன்கிழமை பட்டுக் கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி வழக்கினை விசாரணை செய்து, பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இரண்டா யிரம் ரூபாய் அபராத தொகையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் நீதி மன்ற தலைமைக் காவலர் புனிதா ஆகி யோரை தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் வெகுவாக பாராட்டினார்.