தேனி, மே 11-
கூடலூர் அருகே இளம் பெண்ணை வெட்டி படு கொலை செய்த வழக்கில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் சகோதரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே கருநாக்கமுத் தன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பிரியா (34). இவரது கணவர் விமல் (40). இவர்களுக்கு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.செல்ல பிரியா வின் கணவர் விமல் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.செல்ல பிரியாவுக்கும் விமலுக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது
இந்நிலையில் செல்ல பிரியாவின் கணவர் விமலும், செல்ல பிரியாவின் அண்ணன் செல்லப்பாண்டியும் (38) ஒன்றாக மது அருந்தி விட்டு இருவரும் வீட்டிற்கு வந்து செல்லப்பிரியாவுடன் தகராறு செய்ததாக தெரிகிறது. இந்த தகராறில் விமல் தூண்டுதலின் பேரில் செல்லப் பாண்டி தனது தங்கையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செல்லபிரியா பலி யானார்.
தகவல் அறிந்த கூடலூர் வடக்கு காவல் துறையினர் செல்ல பிரியாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.