districts

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய 4 வாலிபர்கள் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 16- திருச்சி பாலக்கரை காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  

​முதலியார் சத்திரம் பெல்சி மைதானம் ரயில்வே குடியிருப்பில்  ரோந்து சென்ற போது, 6 பேர் அங்கு நின்று கொண்டி ருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் வேகமாக தப்பி ஓடி னர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றதில், நான்கு பேர்  சிக்கிக் கொண்டனர். 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  பிடிபட்ட வாலிபர்களிடமிருந்து 2 கத்தி, உருட்டு கட்டைகள்,  ரோப் கயிறு, மிளகாய் தூள் பாக்கெட் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிறகு அந்த வாலிபர்களிடம் ஆய்வாளர் பெரியசாமி விசா ரணை நடத்தியதில், அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர்கள் திருச்சி பாலக்கரை காஜாபேட்டை  மேல கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த கார்த்தி என்ற கார்த்தி கேயன் (20), நட்டு (எ) நடராஜன் (22), கீழப்புதூர் அம்மன்  கோவில் தெருவைச் சேர்ந்த விஜய் (23), அஜித் (23) என்ப தும் தெரிந்தது.

 வாலிபர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்த னர். பிறகு 4 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். மேலும், தனுஷ், சபரி ஆகிய இரண்டு வாலி பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.