districts

அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா

அரியலூர், ஜூன் 11-

      அரியலூர் புறவழிச் சாலையில் நிகழும்  விபத்துகளாலும், மேம்பாலம் கட்டும் பணி  நடப்பதாலும், தற்காலிகப் பேருந்து நிலை யம் மூன்று கீ.மீ ஊருக்கு வெளியே அமைக்கப் பட்டு உள்ளது.  

     இந்த நிலையில் அரியலூர் புறவழிச் சாலை செந்துறை ரவுண்டானா வழியாகச் செல்லும் அனைத்துப்  பேருந்துகளையும் மருத்துவ கல்லூரி வாசல் வரை வந்து திரும்பிச் செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

       அரியலூர் புற வழிசாலையில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி செந்துறை நெடுஞ் சாலையில் உட்பகுதியில் அமைந்துள்ளது.  

      அரியலூர் புறவழிச் சாலையில் செந்துறை ரவுண்டானா வழியாகச் செல்லும்  பெரம்பலூர், திட்டக்குடி, ஆலத்தூர் கேட், பெண்ணாடம், செந்துறை, கோட்டைகாடு, ஆர்.எஸ்.மாத்தூர்,  குழுமூர், வங்காரம்,  பெண்ணாடம், பொன்பரப்பி, லப்பைகுடி காடு, குன்னம்  பேருந்துகள் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் வரை வந்து திரும்பிச் செல்ல வேண்டும்.

    இதற்கு வசதியாக தமிழ்நாடு வீட்டு வசதி  வாரியம் பயன்படுத்தாமல் உள்ள காலி இடத்தை சுத்தம் செய்து பயன்படுத்தலாம். பேருந்து மருத்துவக்கல்லூரி வரை வந்து  சென்றால் கிராமங்களில் இருந்து மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு வருபவர்கள் பயனடைவார்கள்.  

    மேலும், அரசு கலைக் கல்லூரியில் படிக்கும்  மாணவர்கள், பெரியார் நகர், அழகப்பா நகர், ஜெயலலிதா நகர், அழகப்பா நகர்,  ராஜாஜி நகர், இருசு குட்டை பகுதி மக்க ளும், வியாபாரிகளும் பயன் பெறுவார்கள். நமது நிருபர்