districts

img

கூட்டுக் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் மூடப்படுமா?

பாபநாசம், செப்.6 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் தெருக்களில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பைப் லைன் பதிக்கும் பணி நடந்து வரு கிறது. இதற்காக தோண்டிய பள்ளத்தை, பணி முடிந்தப் பின்னர் சரியாக மூடாமல் சென்று விடுகின்றனர்.  இதனால் சாலை குண்டும், குழியு மாக இருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பைப்  லைன் பதிக்கும் பணியை அனுபவ மில்லாத ஆட்கள் மேற்கொள்கின்றனர். இதை அதிகாரிகளும் மேற்பார்வை யிடுவதில்லை. சாலையும் குண்டும், குழியுமாகி விடுகிறது. இதனால் குடிநீர்  விநியோகம் தடைபடுகிறது. குண்டும்,  குழியுமான சாலையால் வாகன ஓட்டி கள், நடந்து செல்வோர் அவதிப்படு கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றனர்.