மன்னார்குடி, ஜுலை 12 - மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திருவா ரூர் மாவட்டம் மன்னார்குடி சாலை போக்குவரத்தில், ருக்மணி பாளையம் நான்கு சாலை சந்திப்பும் ஒன்றாகும். இங்கு சிக்னல் வசதி உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்க ளில் இந்த சிக்னல் பயன்படுத்தப்படுவதில்லை. சாலையாவது தரமானதாக பாதுகாப்பானதாக இருக் கிறதா என்றால் அதுவும் இல்லை. இடப்புறம் பட்டுக்கோட்டை செல்லும் சாலை. நேராகச் செல்வது தஞ்சை சாலை. கீழ்ப் புறச்சாலை திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப் பூண்டி செல்லும் சாலை. வலப்புற சாலை கும்பகோணம், சென்னை செல்லும் சாலை. வலப்புற ஓரத்தில் ஒரு பள்ளம் உள்ளது. இதில் அன்றா டம் குறைந்தது 4,5 பேராவது தடுமாறி விழுந்து மீண்டும் எழுந்து போக்குவரத்தை சபித்துக் கொண்டே செல்வார்கள். சென்ற மாதம் ஒரு காய்கறி வியாபாரி தனது இருசக்கர வாக னத்தோடு இந்தப் பள்ளத்தில் தடுமாறி விழுந்து சந்திப்பு முழு வதும் காய்கறிகள் சிதறிக் கிடந்தன. நெடுஞ்சாலைத்துறை நகர நிர்வாகம் இந்த முக்கிய போக்குவரத்து சாலையை உடனே மராமத்து செய்திட வேண்டும். இதுவே, இந்தச் சந்திப்பை கடந்து செல்லும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.