districts

img

ரெட்டவயல் கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா?

தஞ்சாவூர், செப்.9 -  ரெட்டவயல் கடைவீதியில் உயர் கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக ஒளிராமல் உள்ளது. அதனை உடனடியாக ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட அரசுத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா வாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல்  கடைவீதியில் அமைக்கப்பட்டு உள்ள உயர் கோபுர மின்விளக்கு ஒளிர்ந்து, அப்பகுதிக்கு பயன ளித்து வந்தது.  தற்போது நீண்ட காலமாக மின்  விளக்குகள் ஒளிராமல் உள்ளன. மேலும், அதில் இருந்த மின் விளக்குகள் சில காணாமல்  போய் விட்டன. இதனால் அந்த கடைவீதி பகுதி இருளடைந்து காணப்படுகிறது. ரெட்டவயல் மற்றும் சுற்றியுள்ள கிரா மங்களை சேர்ந்த, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும்  முக்கிய மையமான இந்தப் பகுதி  இருளடைந்து இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  எனவே, உயர் கோபுர மின்விளக்கை சீரமைத்து புதிய மின் விளக்குகள் பொருத்தி ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.