தஞ்சாவூர், நவ.1 - பட்டுக்கோட்டை நகராட்சி, சிவக்கொல்லை பகுதி யில் சேறும் சகதியுமாக காணப்படும் மண் சாலையை, தார்ச்சாலையாக சீரமைத்து தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 25-வது வார்டு கிளைக் கூட்டம் நடேசன் தலைமையில் நடைபெற் றது. இதில், சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரெ.ஞான சூரியன் பேசினர். கிளை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், “நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதமாக வழங்கப் படாமல் உள்ள சம்பளத்தை நிலுவையின்றி உடனடி யாக வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை நகராட்சி 25 ஆவது வார்டு, சிவக்கொல்லை 4 ஆவது தெருவில் உள்ள மண்சாலை நீண்ட காலமாக பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வரும் சூழலில் சாலை சேறும் சகதியுமாக போக்கு வரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் செடி கொடிகள் மண்டிக் கிடக் கின்றன. இதனால் விஷப்பூச்சிகள் தொல்லை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறை யிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றிய மைத்து தர வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.