பெற்றோர் எதிர்பார்ப்பு பாபநாசம், ஆக.26 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையான பாபநாசத்தில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள் ளது. இப்பள்ளியில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். பெரும்பாலும் பொருளா தாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்தான் இப்பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளிக்கான விளையாட்டு மைதா னம் பள்ளி அருகிலேயே அமைந்துள்ளது. இந்த மைதானத்தின் முன்பக்க காம்பவுண்ட் சுவரில், இருபுறமும் குறிப்பிட்டப் பகுதி இடிந்த நிலையில், ஒரு பகுதியில் மட்டும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. மறுபுறம் திறந்த நிலையில் உள்ளது. ஒருபக்கத்தில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஒரு பக்க காம்பவுண்ட் சுவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இடிந்து விழுந்தது. இடிந்த சுவரை மீண்டும் கட்ட எந்த முயற்சி யும் எடுக்கப்படவில்லை. இந்த மைதா னத்தில் கிளை நூலகம் ஒன்றும் இயங்கி வருகிறது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, இந்த பள்ளி மைதானத்தின் முன்புறம் தரமான முறையில் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட வேண்டும் என்பது பெற்றோர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இந்த மைதானம் அனைத்து வசதிகளுடன், மாண வர்களுக்கு பயன் தர வேண்டும் என்கின்ற னர்.