districts

img

பேராவூரணி - ஆவணம் செல்லும் ஆனந்தவல்லி வாய்க்கால் சாலை சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர், டிச.19 -  பேராவூரணியில் இருந்து ஆனந்தவல்லி வாய்க்கால் வழியாக ஆவ ணம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என  பொதுமக்கள், விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் இருந்து ஆவணம் கல்லணை கால்வாய் வாய்க்கால் செல்லும் வரை, சுமார்  10 கிலோமீட்டர் தூரம் ஆனந்த வல்லி வாய்க்கால் உள்ளது. இதன் ஒரு கரையில் பேரா வூரணியிலிருந்து பொன்னாங் கண்ணிக்காடு, மாவடு குறிச்சி, பழைய நகரம், அரசலங்கரம்பை வழியாக ஆவணம் செல்லும் சாலை உள்ளது.  இதன் ஒருபுறம் அம்மை யாண்டி செல்லும் சாலை யும், மற்றொருபுறம் சிவன் குறிச்சி செல்லும் சாலையும் உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.  பேராவூரணியில் இருந்து ஆவணம் செல்வதற்கு வாகன ஓட்டிகள் பலரும் இச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.  தற்போது பேராவூரணி யில் இருந்து மாவடுகுறிச்சி வரை சாலை ஓரளவு போக்கு வரத்துக்கு உகந்ததாக  உள்ளது. மாவடுகுறிச்சியி லிருந்து அரசலங்கரம்பை வரை சாலை குண்டும்குழியு மாக உள்ளது. கப்பிகள் பெயர்ந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலையின் இருபுறமும் புதர்  மண்டிக் கிடக்கிறது. இத னால் பொதுமக்கள், வாகன  ஓட்டிகள் மிகுந்த சிரமத் திற்கு ஆளாகின்றனர். இந்த சாலையை சீர மைத்து தந்தால், ஆவணம்  செல்ல மாற்றுச் சாலையாக வும் அமையும். மேலும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல  வசதியாகவும் இருக்கும். எனவே, மாவடுகுறிச்சியில் இருந்து அரசலங்கரம்பை வரை உள்ள சேதமடைந்த சுமார் 4 கிலோ மீட்டர் நீள முள்ள சாலையை சீரமைத்து  தர வேண்டும் என இப்பகுதி  பொதுமக்கள், விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.