திருச்சிராப்பள்ளி, ஜூலை 19 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் அரியாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றி தீரன் நகர் மற்றும் சுற்றுப்புற நகர்களின் வீடுகளை காப்பாற்ற வேண்டும். 90 மீட்டர் அகலம் கொண்ட அரி யாற்றை தீரன் நகரில் 12 மீட்டராக குறுகி யதை சரி செய்ய வேண்டும். நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகத் தின் சீர்கேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தீரன் நகர் பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு நலச்சங்கத் தலைவர் மருதமுத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கௌரவத் தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் ராம தாஸ், பொருளாளர் ஜோசப் ஆகியோர் பேசி னர். இதில் வாசன் நகர் நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.