புதுக்கோட்டை, ஆக.3-
குன்றுகள் அழிக்கப்பட்டதால் புதுக்கோட்டை வறட்சி மாவட்டமானது என்றார் சூழலியல் எழுத்தாளர் நக்கீ ரன். புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் புதன்கிழமை அவர் “சுற்றுச்சூழ லும் புதுக்கோட்டையும்” என்ற தலைப் பில் பேசியது:
புதுக்கோட்டைக்கு முன்பொரு காலத்தில் ராஜராஜ வளநாட்டுப் பன்றி யூர் என்ற பெயர் இருந்திருக்கிறது. பன்றிகள் இருந்த காடு என்றால், அந்த ளவுக்கு வளமான ஊராக வளமுடன் இருந்திருக்க வேண்டும். அதன்பிறகு கோன் நாடு, கான் நாடு என்றெல்லாமும் புதுக்கோட்டைப் பகுதிகள் அழைக்கப் பட்டிருக்கின்றன. அந்த அளவுக்கு வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறக் காரணம் என்ன என்பதை யோசித்துப் பார்கக் வேண்டும்.
தமிழ் நிலப்பரப்பில் கண்டறியப் பட்ட கற்றளிகளில் அதிகமானவை டெல்டா மாவட்டங்களில் உள்ளன. இந்த நான்கு மாவட்டங்களிலும் ஏறக் குறைய நான்கு கிலோ மீட்டருக்கு ஒரு கற்றளிக் கோவில்கள் உள்ளன. ஆனால் இந்தப் பகுதிகளில் சின்னப் பாறைகள்கூட கிடையாது. அத்தனைக் கற்களைளும் புதுக்கோட்டைப் பகுதி களில் இருந்துதான் கொண்டு செல் லப்பட்டுள்ளது. இங்குள்ள குன்றுகள் எல்லாம் இப்படித்தான் அழிக்கப்பட் டன. அநேகமாக முதல் குவாரி புதுக் கோட்டை பகுதியில்தான் இருந்திருக் கக் கூடும். குன்று என்பது நுண்கால நிலையைக் கொண்ட பகுதி என்று சூழ லியலாளர்கள் அழைக்கிறோம். இந்தப் பாறைகள்தான் பருவமழையை தவறாமல் அழைத்து வந்திருக்கின்றன. அத்தனை வளம் நிறைந்த புதுக் கோட்டை மாவட்டம் குவாரிகளால் அழிந்தன.
ஒரு காலத்தில் மண் உப்பு அதிக மாக இருந்த பகுதி புதுக்கோட்டை. ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், கடல் உப்பைவிடவும் மென்மையாகவும் இருந்தது இந்த மண் உப்பு. கடல் உப்பை விட விலையும் குறைவாகக் கிடைத்தது. சமஸ்தானமாக இருந்த காலத்தில் 175 கிராமங்களில் உப்பு எடுக்கும் தொழில் நடந்திருக்கிறது. இங்கிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு உப்பு குறைந்த விலையில் விற்கப் பட்டது. இதனால், கடலோரங்களில் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த உப்ப ளங்கள் போதிய லாபம் ஈட்ட முடிய வில்லை.
ஆங்கிலேயர்களின் நிர்ப்பந்தம் காரணமாக சமஸ்தான அரசு உப்புக்கு அதிக வரியை விதித்தது. இதன் காரண மாக, இங்கிருந்து 88 ஆயிரம் பேர் வெளி நாடுகளுக்குச் சென்றனர். அவர்களில் 70 ஆயிரம் பேர் இலங்கைக்குச் சென் றுள்ளனர். 85 ஆயிரம் என்பது சாதா ரண எண்ணிக்கையல்ல. சமஸ்தானத் தின் மொத்த மக்கள் தொகையில் ஐந் தில் ஒரு பங்கினர். இவர்களை நாங்கள் சூழலியல் அகதிகள் என்றழைக்கிறோம்.
அறந்தாங்கி அருகே இப்போதும் நர சிங்கக் காவிரி என்ற பெயரில் ஆறு இருக்கிறது. காவிரி என்ற பெயர் எங்கி ருந்து வந்திருக்கக் கூடும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடகில் உற் பத்தியாகும் காவிரியாறு பூமிக்கு அடி யில் நகரும் தட்டுகளால் அதன் வழித் தடம் ஒவ்வொரு காலத்திலும் மாறி மாறி வந்துள்ளது. ஒரு காலத்தில் சென் னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் வழிதான் கடலில் காவிரி கலந்திருக்கி றது. அதன்பிறகு பாலாற்றின் வழியே, கடலில் கலந்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள வெள்ளாற்றில் வழியே மண மேல்குடியிலும், அதன்பிறகு அம்புலி யாற்றின் வழியே சேதுபாவாசத்திரத்தி லும், பின்னர் அக்னியாற்றின் வழியே அதிராம்பட்டினத்திலும் காவிரி கட லில் கலந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று வழித்தடங்களில் காவிரி பாய்ந்து இருக்கிறது. அப்படியென் றால், புதுக்கோட்டை மாவட்டம் எத் தனை அபரிமிதமான நிலத்தடி நீரைக் கொண்ட பகுதியாக இருந்திருக்கும் என்பதைப் பார்க்கலாம். சூழலியல் ஆழிக்கப்பட்டதால் இன்று வறட்சி யான மாவட்டமாக புதுக்கோட்டை இருக்கிறது. எனவே, புதுக்கோட்டை யை வறட்சியான மாவட்டம் எனக் கூற வேண்டாம், புதுக்கோட்டை நிறைய தியாகங்களைச் செய்த மாவட்டம் என்பதுதான் சரியானது.
இவ்வாறு; நக்கீரன் பேசினார். விழாவிற்கு மருத்துவர் ச.இராம தாஸ் தலைமை வகித்தார். எழுத்தாளர் பவா.செல்லத்துரை, மேனாள் துணை வேந்தர் சொ.சுப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக க.சதா சிவம் வரவேற்க, கு.துரையரசன் நன்றி கூறினார்.