மதுரை தோப்பூரில் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான எந்தவொரு கட்டுமானப்பணியும் துவங்கவில்லை. தமிழ்நாட்டிற் கான திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு செய்ய மறுத்து புறக்கணித்து வருவதற்கு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் கட்டு மானப்பணிக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் உடனடியாக நிதி ஒதுக்கி பணியை துவக்கக்கோரியும் ஜனவரி 23ஆம் தேதி தென் மாவட்டங்களின் நாடா ளுமன்ற உறுப்பினர்களான மதுரை சு.வெங்கடேசன், விருதுநகர் மாணிக் கம் தாக்கூர் இராமநாதபுரம் நவாஸ் கனி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமு கர்கள், தொழில் முனைவோர்கள் ,பொதுமக்கள் கலந்து கொள்ளும் தொடர் முழக்கப் போராட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடை பெற உள்ளது. இப்போராட்டத்தை பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியும் நோட்டீஸ் வினியோகித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை நகர் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.