பழனி, ஆக.6-
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக குறிப்பு வருமாறு:
“0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண் டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர், நட்சத்திரம் கேட்பார் / அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரி வித்து பதிவு செய்துகொள் ளும் வாய்ப்பை அனை வரும் பயன்படுத்திக் கொள் ளுங்கள்” என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழி யாக பரப்பப்பட்டு வரு வது இத்திருக்கோயில் நிர் வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.
அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கிய வர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரி வில் சட்ட ரீதியான நட வடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடு கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை எனவும் பக்தர் கள்/ பொது மக்கள் அவ்வா றான பொய்யான தகவல் களை நம்பி ஏமாற வேண் டாம் எனவும் கோயில் நிர்வா கம் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.