districts

img

நாட்டைக் காப்போம்; சட்டப் பாதுகாப்பு பரப்புரை கலைப் பயணத்திற்கு வரவேற்பு

புதுக்கோட்டை, அக்.11 - நாட்டைக் காப்போம், குடிமைச் சமூ கங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப் புச் சட்டப் பாதுகாப்பு பரப்புரை கலைப்பய ணத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் வர வேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திரமாக உயிர்வாழ, பேச, எழுத, படிக்க, வழிபட, போராட உரிமையை வழங்கும்  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதி ராக எப்போதும் இல்லாத அளவுக்கு வன் முறை கலாச்சாரம் நாடெங்கிலும் திட்டமிட்டு  வளர்த்தெடுக்கப்படுகிறது. வெறுப்புப் பேச்சுகளை ஆட்சி அதிகாரத்தில் இருப் போரே தொடர்ந்து நடைமுறைப் படுத்து கின்றனர். நாடாளுமன்றத்திலும் வெறுப்புப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நாட்டைக் காப் போம், குடிமைச் சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புப் பரப்புரை கலைப்பயணம் தமிழ்நாடு முழு வதும் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆதனக் கோட்டை, ஆலங்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பிரச்சாரப் பய ணம் செவ்வாயன்று நடைபெற்றது.  புதுக்கோட்டையில் நடைபெற்ற கலைப்  பிரச்சாரத்திற்கு மக்கள் ஒற்றுமை மேடை யின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அ. மணவாளன் தலைமை வகித்தார். ஒருங்கி ணைப்பாளர் எம்.அசோகன் ஒருங்கிணைத் தார். காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில துணைத்  தலைவர் கண்ணன், விசிக மாவட்டச் செய லாளர் திலீபன், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, அறிவியல் இயக்க  மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மக்கள் ஒற்றுமை மேடை அரியலூர் மாவட்ட அமைப் பாளர் மணிவேல் தலைமை வகித்தார். கலைக்குழுவின் பிரச்சாரத்தை வாழ்த்தி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் பேசி  னர்.