districts

img

லெனின் நகர் குடியிருப்பை இடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!

புதுக்கோட்டை, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் திரு மயத்தில் உள்ள லெனின் நகர் குடி யிருப்பை இடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னதுரை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத் தில் உள்ள லெனின் நகரில் சுமார் 60  குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். தாங்கள்  வசிக்கும் இடத்திற்கு வீட்டு ரசீது, குடும்ப  அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,  மின் இணைப்பு என அனைத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தால் செய்து  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அர சுக்குச் சொந்தமான அலுவலகங்களும் இப்பகுதியில் உள்ளன. இந்நிலையில், மேற்படி இடம் விநாய கர் கண்மாய் என்றும், நீர்ப்பிடிப்புப் பகுதி என்றும் கூறி வீடுகளை இடிப்பதற்கு வரு வாய்த் துறையினரும், நீர்வளத்துறை அதிகாரிகளும் நோட்டீஸ் கொடுத்துள்ள னர்.

ஆனால் அந்தக் கண்மாய்க்கு நீர் வரத்தோ, சாகுபடி நிலங்களோ இல்லை. அந்த இடங்கள் கட்டிடங்களாக மாறி பல  ஆண்டுகள் ஆகிவிட்டன. லெனின் நகரில் வசித்து வரும் அனை வரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்களாகவும், வேறு இடத்தில் வாடகைக்கோ, சொந்தமாக நிலம் வாங்கி வீடுகட்டும் அளவுக்கு வசதி,  வாய்ப்புகளோ இல்லாததால், மேற்படி  இடத்தை இடிக்கக் கூடாது எனவும், அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கே வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டு மென வலியுறுத்தியும் திருமயத்தில் திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் திருமயம் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதி உறுப்பினருமான எம்.சின்னதுரை கண்டன உரையாற்றினார்.  அப்போது அவர் பேசுகையில், “பேருந்து நிலையம் அருகில் பட்டிய லின மக்கள் வசிப்பது சிலருக்கு உறுத்து கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடி யிருந்து வரும் லெனின் நகர் குடியிருப்பை  அப்புறப்படுத்த அதிகாரிகள் துடிக்கின்ற னர். லெனின் என்ற பெயரைக் கேட்டாலே  அதிகார வர்க்கம் நடுங்குகிறது. முன்னாள்  முதல்வர் கலைஞர் ஆட்சியில் அனைத்து  சமுதாய மக்களையும் இணைத்து சமத்து வபுரத்தை உருவாக்கினார்.  லெனின் நகரில் இயல்பாகவே அனைத்து சமூக மக்களும் வசித்து வரு கின்றனர். கலைஞரின் வழிவந்த மு.க. ஸ்டாலின் அரசு, சமத்துவபுரமாக உள்ள  லெனின் நகரை இடிக்க முயல்வது நியாயமா? நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது  என அதிகாரிகள் கைவிரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவு களையும் எதிர்த்து தமிழ்நாட்டில் பல  இடங்களில் ஏழை மக்களின் குடியிருப்பு களை இடிக்க விடாமல் தடுத்த வரலாறு  செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. இந்த லெனின் நகரில் 18 விதவைப் பெண்கள் வசித்து வருகின்றனர். தாய்,  தந்தையரை இழந்து ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளும் வசித்து வருகின்றனர். லெனின் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. பட்டியலின மக்களும், ஏழை-எளிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஊரின் மையப் பகுதியில், பேருந்து நிலையம் அருகில் வசிப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது.

அவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரண மாகத்தான் அதிகாரிகள் லெனின் நகரை  இடிப்பதற்குத் துடிக்கின்றனர். தற்பொழுது அதிகாரிகள் மாற்று  இடம் குறித்து என்னிடம் பேசி வருகின்ற னர். எங்களைப் பொறுத்தவரை பயன் பாடற்ற நீர்நிலைப் புறம்போக்காக இருந்து வரும் லெனின் நகர் பகுதியை வகை மாற்றம் செய்து அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். லெனின் நகர் குடியிருப்பு வீடுகளை இடிப்பதற்கு ஒரு  போதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்டச்  செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமையன், விதொச மாவட்டப்  பொருளாளர் கே.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் துரை.நாராயணன், திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர்,  மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசிலா, பொருளாளர் ஜெ.வைகைராணி, விவசாயிகள் சங்க ஒள்றியச் செயலாளர் வீரமணி, விசிக ஒன்றியச் செயலாளர் வீர மணி, தொகுதி செயலாளர் ரமேஷ், மருத்துவர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் திருமயம் வட்டாட் சியரிடம் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலை மையில் மேற்படி லெனின் நகர் குடி யிருப்பை இடிக்க கூடாது என வலியு றுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜீ.நாகராஜன், சு.மதியகழன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட 300-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.