districts

img

ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண போராடுவோம் கே.பாலபாரதி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 22-

       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் விளக்க மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் புதனன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெற்றது.  

     கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செய லாளர் தர்மா தலைமை வகித்தார். கூட் டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா ஆகியோர் பேசினர். மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி சிறப்புரையாற்றினார்.

     அப்போது கே.பாலபாரதி பேசுகை யில், ‘‘ஒன்றிய மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்  துள்ளது. இதனால் உணவுப்பொருட் கள் விலையும் உயர்கிறது. கடந்த 10  ஆண்டுகளில் உலக அளவில் பெட்ரோ லிய பொருட்களின் விலை உயர வில்லை. பாதியாக குறைந்துள்ளது.  

    பாஜகவின் மக்கள் விரோத கொள்கை மற்றும் கார்ப்பரேட் கொள்  ளைக்கு ஆதரவு என்ற முடிவால் இந்த  விலை உயர்வு தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஒருதடவை கூட பெட் ரோல், டீசல், எரிவாயு விலைகுறித்து பேசியதில்லை.  

     கர்நாடகா, இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள், 2024-ஆம் ஆண்டு மே மாதம் பாஜக வீட்டிற்கு செல்லும் மாதமாக இருக்கும் என காட்டுகிறது.  

      தமிழகத்தில் இரண்டு அரசாங்கம் உள்ளது. ஒன்று மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட தமிழக அரசாங்கம், மற்  றொன்று பாஜகவால் நிழலாக அமைக் கப்பட்ட ஆளுநர் அரசாங்கம். இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை மிக மோசமாக பறித்து வருகிறது.  

ஜெயலலிதா மறுப்பு; ஓபிஎஸ், இபிஎஸ் ஒப்புதல்

     ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு  சட்டம் தமிழ்நாடு மக்களின் ரேசன் கடை களை பறித்து விடும் என முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கூறி அதில் கையெழுத்துயிட மறுத்  தார். அதே போல் மின்சார உரிமையை மாநில அரசிடமிருந்து, ஒன்றிய அரசு  எடுத்துக்கொள்ளும் உதய் மின் திட்டத்திலும், நீட் தேர்விற்கும் எதிர்ப்பு  தெரிவித்து ஜெயலலிதா கையெழுத் திட மறுத்தார்.

    ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் இந்த இந்த திட்டங்களில் கையெழுத்து போட்டனர். இதனால் இந்த திட்டமும் அமலுக்கு வந்தது. ஆனால் இதை எதிர்த்து திமுக ஆட்சி யின் போது இன்று தெருவிற்கு வந்து  போராடுகின்றனர்.

     திருச்சியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. அதற்கு பின்னால் சமூக விரோத கும்பல் இருக்கின்றனர். எனவே காவல்  துறை இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்கள்  நடமாட்டத்தில் காவல்துறை உயர்அதி காரிகளுக்கு தான் உரிய தண்டனை வழங்க வேண்டும்.  

    ஸ்ரீரங்கத்தில் பலநூற்றாண்டு கால மாக இருக்கக்கூடிய மக்களுக்கு கோவி லுக்கு சொந்தமான இடத்தில் உரிய வாடகையை பெற்றுக்கொண்டு அவர் களுக்கு கொடுப்பதில் என்ன தவறு? ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு எதிர்காலத்தில் ஒரு தொடர் போராட்டத்தை நடத்த மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிடு கிறது.  

    இந்த போரட்டத்திற்கு இப்பகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் அனை வரும் ஆதரவு தரவேண்டும். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு  குறைந்தபட்ட ஊதியத்திற்கான சட்டத்தை மாநில திமுக அரசு கொண்டு  வரவேண்டும்’’ என்றார்.  

     கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, பகுதி செயலாளர்கள், பகுதிக்குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பினர்கள், வெகுஜன அரங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் சுப்பிரமணி வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் ரகுபதி நன்றி கூறினார்.