கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் இழந்து, பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் விரைவில் மீண்டு வர திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் சங்கம் சார்பில் (சிஐடியு) கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்து, நிவாரண நிதியாக ரூ.2,50,000 வழங்கினர்.