districts

img

கோயில் குளத்தில் நீர் நாய்கள்: பொதுமக்கள் கண்டு ரசிப்பு

தஞ்சாவூர், ஜூலை 24 -  தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி அருகே  உள்ள சேதுபாவா சத்திரத்தில் சிவன் கோ வில் உள்ளது. இந்த கோ விலின் அருகில் உள்ள குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது.  இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (திங்கள்கிழமை) குளக்கரையில் வசிக்கும் பொதுமக்கள் குளத்தினுள் வித்தியாசமான இரண்டு உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதை கண்டனர். அந்த விலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குளத்தின்  திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் கண்டனர்.  இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் சாகுல்ஹமீது மற்றும் கிராமத்தினர் வனத்து றைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலு வலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்ச ரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் புதன்கிழமை சிவன் கோவில்  குளத்தை கண்காணித்தனர். அப்போது, குளத்தில் இருந்தது  நீர்நாய் என தெரிய வந்தது. இதுகுறித்து வனச்சரக அலுவலர் சந்திரசேகர் கூறு கையில், “இது நீர் நிலைகளில் வாழும் உயிரினமான நீர்நாய்.  இது காவிரி ஆற்றங்கரைகளில் இருப்பதாக கண்டறியப் பட்டது. தற்போது இப்பகுதிக்கு எப்படி வந்தது எனத் தெரிய வில்லை. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நீர் நாய்கள் நீர் நிலைகளில் காணப்படும் மீன்களை உண வாக உட்கொள்கின்றன. இவற்றால் மனிதர்களுக்கு எந்த தொந்த ரவும் இருக்காது. இருந்த போதிலும் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். பொதுமக்களும் அதற்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.