districts

காவிரி, கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக.30 - திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி யில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளி யேற்றத்தினையும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முழுநேர கண்கா ணிப்புடன் பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தொ டர்ந்து அதிக உபரிநீர் வெளியேற்றம் கார ணமாக, இந்த ஆறுகளின் கரையோரங் களில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகு தியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு  செல்ல வேண்டும். கால்நடைகளை பாதுகாப் பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இந்த நீர்நிலைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும். கரையோரத்தில் நின்று  செல்பி புகைப்படங்கள் எடுப்பதைப் தவிர்த்து  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என  பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார். 

;