புதுக்கோட்டை, ஆக.5 - வாரியம் அறிவித்த குறைந்தபட்ச ஊதி யத்தை வங்கி மூலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் காத்தி ருக்கும் போராட்டத்தை நடத்தினர். குடிநீர் வடிகால் வாரிய புதுக்கோட்டை கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற காத்தி ருக்கும் போராட்டத்திற்கு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டத் தலைவர் எஸ்.யாசிந்த் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சி. அன்புமணவாளன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் மா.ஆத்மநாதன், மாநில துணைத் தலைவர் ஆர்.மருதைராசு, சிஐ டியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகி யோர் கண்டன உரையாற்றினார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பேசினர். வாரியம் அறிவித்த குறைந்தபட்ச ஊதி யத்தை வங்கி மூலமாக வழங்க வேண்டும். ஊதிய விகிதத்திற்கு ஏற்ப சட்டப்படியான இபிஎப், இஎஸ்ஐ வரவு வைத்து அட்டை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு காப்பீடு செய்து பத்திர நகல் வழங்க வேண்டும். 10 ஆண்டு பணிமுடித்த ஒப்பந்த ஊழி யர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். போனஸ் சட்டம் 1965 இன் படி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.