districts

img

குடிநீரில் கழிவுகள் கலப்பு வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜன.4- புதுக்கோட்டை மாவட்  டம் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டி யில் மனித மலத்தை கலந்த சாதி வெறியர்களை உடனடி யாக கைது செய்திட கோரி யும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உயர் சிகிச்சையும் இழப்பீடும் வழங்க வேண்  டும், தமிழகம் முழுவதும் நில வும் தீண்டாமை கொடுமை களை கலைந்திட இரும்பு  கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காட்டூர் பகுதிக் குழு சார்பில் புதனன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். மாந கர் மாவட்டத் தலைவர் பா. லெனின் கண்டன உரை யாற்றினார்.