districts

திருச்சி முக்கிய செய்திகள்

அமராவதி  ஆற்றங் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கரூர், ஜூலை 19 - திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  வட்டத்தில் அமைந் துள்ள அமராவதி அணை யின் நீர் மட்டம் வியாழ னன்று காலை சுமார் 10  மணியளவில் 84.20 அடி யாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதி களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்  அணைக்கு விநாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து  வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் உபரி நீர் முழு மையாக திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே,  அமராவதி ஆற்றின் கரை யோரப் பகுதிகளில் சிறு வர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவ ரும் நீரில் இறங்கி குளிப்ப தையோ, மீன் பிடிப்ப தையோ, கால்நடை களை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங் கள் எடுப்பதையோ முற்றி லும் தவிர்க்குமாறு கரூர்  மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

புதிய வகுப்பறைகள் திறப்பு

பாபநாசம்,  ஜூலை 19 -  தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூரை அடுத்த திரு நாவூர் நத்தம் ஊராட்சி  ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தை சென்னையில் காணொலி  மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத் தார். இதையடுத்து பள்ளியில் குத்து விளக் கேற்றப்பட்டது. இதில் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பிடிஓ  ராஜன், உதவிப் பொறியா ளர் சிவ பிரகாசம், திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செய லர் சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியை உமா  மகேஸ்வரி மற்றும் ஆசிரி யர்கள் பங்கேற்றனர். பணியேற்பு பாபநாசம், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலு வலகத்தில் புதிய தாசில் தாராக செந்தில்குமார் வெள்ளியன்று பணியேற் றார். இதற்குமுன் தாசில் தாராக பணியாற்றிய மணிகண்டன், தேசிய நெடுஞ்சாலை 32 நிலை எடுப்பு தனி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப் பட்டுள்ளார்.

காவல்துறையின் விழிப்புணர்வு போட்டி 

தஞ்சாவூர்,  ஜூலை 19-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி யில், தமிழ்நாடு காவல் துறை சார்பில், “பெண்  குழந்தைகளை காப் போம், பெண்களுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில், போதைப் பொருள்களுக்கு எதி ரான விழிப்புணர்வு பேச்சுப்  போட்டி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் கோ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் ஆனந்தராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பெண் கல்வி யின் அவசியத்தை வலி யுறுத்தியும், போதைப்  பொருள் ஒழிப்பு குறித் தும்  உரையாற்றினார்.  தொடர்ந்து, போட்டி யில் வெற்றி பெற்ற மாண விகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பேராவூரணி அருகே 3 அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 3 அரசுப்  பள்ளிக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலை யில், காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து பேராவூரணி ஒன்றியம், பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.67.03  லட்டத்தில் கட்டப்பட்ட 4 வகுப்பறைக் கட்டடம், சேதுபா வாசத்திரம் ஒன்றியம், கொடிவயல்-மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ரூ.42.11 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று வகுப்பறை கொண்ட பள்ளிக் கட்டிடம், விளங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.29.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடம் ஆகியவற்றை பார்வை யிட்டு, பள்ளிகளின் வகுப்பறைகளில் குத்து விளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்.

வெயிலில் புழுதி; மழையில் சேறு
மண் சாலையால் பொன்னமராவதி மக்கள் அவதி

பொன்னமராவதி, ஜூலை 19 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நகரின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில், சாலையின் நடுவே சுமார் 1000 மீட்டர் நீளமுள்ள ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.  பெரும்பாலான இடத்தில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், தார்ச் சாலை அமைக்காமல் மண் சாலையாக உள்ளது. இதனால் வெயில் அடிக்கும் போது மண் புழுதியாகவும், மழை பெய்யும் போது சேறும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 18 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சியினர், ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில், பொன்னமராவதி வர்த்தக கழக தலைவர் பழனியப்பன், செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் ராமஜெயம் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர்.  அதன் அடிப்படையில் ஜூலை 18 அன்று காலை ஒரு மணி நேரம் அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மறியல், கடை அடைப்பு தொடர்பாக பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.  இதில், “வர்த்தகர்கள் மற்றும் சிபிஎம் கோரிக்கைகளுக்கு முடிவு எட்டப்படாததால் ஆகஸ்ட் 1 -க்குள் பொன்னமராவதியின் முக்கிய வர்த்தகப் பகுதியான அண்ணா சாலையில் மண்புழுதி ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக சாலை அமைத்து தர வேண்டும். தவறும் பட்சத்தில் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்” என பொன்னமராவதி வர்த்தக கழகத்தினர் அறிவித்துள்ளனர்.  கூட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள், பொன்னமராவதி வர்த்தக கழக நிர்வாகிகள், வர்த்தகர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேருந்தை முந்த முயன்ற பைக்குகள்  நேருக்கு நேர் மோதி விபத்து தாய், மகன் உட்பட மூவர் பலி

தஞ்சாவூர், ஜூலை 19 -  தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து  வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களின் மகன்  மோனிஷ் (9). வெள்ளிக்கிழமை காலை ஸ்கூட்டரில் ராதிகா  தனது மகன் மோனிஷை அழைத்துக்கொண்டு பரவாக்கோட் டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுக்கூரில் இருந்து மன்னார்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்த நிலையில்,  பேருந்தின் பின்னால் சென்று கொண்டிருந்த ராதிகா பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.  அப்போது திருவாரூர் மாவட்டம் பைங்காநாடு பகுதி யைச் சேர்ந்த விக்னேஷ் (18), பல்சர் டூவீரில், தனது ஊரில்  இருந்து மதுக்கூருக்கு வந்து கொண்டிருந்தார். கண்ணி மைக்கும் நேரத்தில் எதிர்பாராமல் டூ வீலர்கள் நேருக்கு நேர்  மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ராதிகா, மோனிஷ், விக்னேஷ் ஆகியோர் மூவரும் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த மதுக்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மூவரின் உடலையும் மீட்டு, பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த விக்னேஷ் கும்பகோணம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தனியார் நிறுவன ஏல முறைகேடு: விசாரணை நடத்த வேண்டும்
தஞ்சை மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 19 - தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகத்தில் தனியார் நிறுவனத்துக்கு விடப்பட்ட ஏல முறைகேடு தொடர்பாக  குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. மேயர் சண்.ராமநாதன் தலைமையி லும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி,  ஆணையர் இரா.மகேஸ்வரி முன்னி லையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மொத்தம் 50 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், தஞ்சாவூர் காந்திஜி வணிக வளாகம் புதிதாகக் கட்டப்பட்டு, விடப்பட்ட ஏலம் முறையாக நடைபெற வில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுப் படி ஏலத்தை ரத்து செய்வது குறித்து தொ டர்புடைய தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது எனவும், அதற்கு தனியார் நிறுவனம் அளித்த  பதில் சம்பந்தம் இல்லாத, உண்மைக்கு  புறம்பான ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, தாங்கள் செய்த தவறை திசை  திருப்பும் நோக்கிலும், நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என்றும், தனியார் நிறுவனத்தின்  பதில் ஏற்றுக் கொள்ள இயலாத வகை யில் உள்ளதால், ஏலம் மற்றும் மாநக ராட்சியுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப் படுவது குறித்த தீர்மானமும் இடம் பெற்றது. இத்தீர்மானம் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், இந்த  தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.  இந்த ஏலத்தில் முந்தைய ஆணையர் தவறு செய்திருந்தால், அவருக்கு துணையாக இருந்த மேயர் மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வர  வேண்டும். இந்த ஏலத்தில் முறைகேடு கள் செய்த அலுவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். இது தொடர் பாக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட் டோர் கொண்ட குழு அமைத்து விசா ரணை நடத்த வேண்டும் என்றனர். அதற்கு மேயர், யாராக இருந்தா லும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும் என பதிலளித்தார். மேலும், முந்தைய ஆணையர் சரி யாக செய்யாமல் தனியார் நிறுவனத் துக்கு ஏலம் விட்டுள்ளார். இந்தச் சூழ்நி லையில் இந்நிறுவனத்தைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத் தார். இந்தத் தீர்மானத்தை ஒத்தி வைத்ததற்கான காரணம் என்ன என்ற  கருத்தும் எழுந்தது.  இதனால், உறுப்பி னர்கள் கேட்டுக் கொண்டபடி தீர்மானம்  ஒத்தி வைக்கப்படுகிறது என மேயர் அறி வித்தார். இந்நிலையில், இத்தீர்மானத்தை ஒத்தி வைக்காமல் நீதிமன்ற உத்தரவு படி, அந்த இடத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி சரி யான நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பதிலளித்தார். தொடர்ந்து, இந்த தீர்மானம் தொ டர்பாக கூட்டத்தில் சலசலப்பு நிலவி யது. இதனால், இந்தத் தீர்மானம் ஒத்தி  வைக்கப்படுகிறது என்றும், மற்ற தீர்மா னங்கள் அனைத்தும் நிறைவேற்றப் பட்டன என்றும் மேயர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அடையாள அட்டை பெற நடவடிக்கை தேவை

தஞ்சாவூர், ஜூலை 18-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் கோட்டாட்சி யர் ஜெயஸ்ரீ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ. மேனகா, மாவட்டத் துணைச் செயலாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், சேது பாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஏ. ராஜேஷ் கண்ணா, முன்னாள்  மாவட்ட துணைத் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, மதுக்கூர் ஒன்றியத்  தலைவர் பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் மணி கண்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமில் திரளான மாற்றுத்திறனாளிகள், அவர் தம் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர். எங்கு பதிவு செய்வது, எப்படி பதிவு செய்வது, என்னென்ன ஆவணங்கள் தேவை, யாரை முதலில் சந்திப்பது என தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே அவர்கள்  அனைவரையும் முறைப்படுத்தி, சிரமமின்றி அடையாள அட்டை பெற்று  தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கு தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும். பட்டுக் கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் பெட்ரோல்  ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அவற்றை  உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும். சட்டப்படி வேலை  நேரம் நிர்ணயித்து ஊதியம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

ரேசன் கடை, நூலகம் அமைத்துத் தரப்படுமா?
காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர், ஜூலை 19-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூவாணம் கிராமத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம்  எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி,  விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ. கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர்.  இக்கூட்டத்தில், பூவாணம் ஊராட்சியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நியாய  விலைக் கடை அமைத்து தர வேண்டும். மாண வர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் நூலகம் அமைத்து தர வேண்டும். நூறு நாள் வேலையைத் துவக்கி, அனைவருக்கும்  வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கை களை வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவல கம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழகியநாயகிபுரம் ஊராட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம், கிளைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா  தலைமையில் நடைபெற்றது. இப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோருக்கு குடி மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தும், இது வரை பட்டா வழங்கப்படவில்லை. விண்ணப் பித்த அனைவருக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு  போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.

விபத்தில் சிக்கிய ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ-வின் கார் 

மயிலாடுதுறை, ஜூலை 19 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள என்.என்.சாவ டியில் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகே யனின் கார் மோதி விபத்து ஏற்பட்டது.  ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகே யன் புதனன்று காரைக்கால் சென்று விட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வழியாக காரில் சென்றுள்ளார்.  என்.என் சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று  கொண்டிருக்கும் போது காழியப்பநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக சாலையில் எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த கொத்தனார் மணிகண்டன் (18), 12 ஆம் வகுப்பு மாணவர் செல்வகுமார்(16) ஆகிய இருவர் இருசக்கர  வாகனத்தில் காழியப்பநல்லூர் ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ள சாலையில் இருந்து,  தேசிய நெடுஞ்சாலையில் ஏறி திரும்பியதாக கூறப்படுகிறது.  அப்போது அதிவேகமாக வந்த வசந்தம் கார்த்திகேயனின் கார், இந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பிய போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, கார்த்தி என்பவரின் வீட்டின்மீது கார் மோதி போர்டிகோவில் புகுந்தது.  போர்டிகோ பகுதி மற்றும் வீட்டில் நிறுத்தியிருந்த கார், இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.   இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்ட னுக்கு கால் மற்றும் உடலில் காயமும், செல்வகுமாருக்கு வலது முழங்கா லுக்கு கீழ் எலும்புமுறிவும் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த  மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தான் வந்த அரசு வாக னத்தில் இருவரையும் மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினார்.  இந்த விபத்து தொடர்பாக கார் மோதியதில் சேதமடைந்த வீட்டின்  உரிமையாளர் கார்த்தி, பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை அஜாக்கிர தையாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியதாக மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.