districts

img

சாதிச் சான்றிதழ் கேட்டு இந்து ஆதியன் இன மக்கள் சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் காத்திருப்புப் போராட்டம்

புதுக்கோட்டை, அக்.4 - ‘இந்து ஆதியன்’ என சான்றிதழ் கேட்டு புதுக்கோட்டையை அடுத்த  காமராஜ் நகர் மக்கள் சட்டப்பேரவை  உறுப்பினர் எம்.சின்னதுரை தலை மையில் கீரனூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் தாலுகா, அன்னவாசல் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜ் நகரில் சுமார் 40 குடும்பத்தினர், 20  ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து  வருகின்றனர். இந்து ஆதியன்  வகுப்பைச் சேர்ந்த இவர்களுக்கு ‘இந்து ஆதியன்’ என சாதிச்சான்றி தழ் வழங்க வலியுறுத்தி, கடந்த  சில வருடங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு இதுகுறித்து கோரிக்கை மனுவும் அனுப்பி உள்ளனர். ஆனாலும், இவர்களுக்கு இது வரை சாதிச் சான்றிதழ் கிடைக்க வில்லை. இந்நிலையில், இவர் களுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு  கீரனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயி கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகேர்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர்  சி. ஜீவானந்தம் முன்னிலை வகித் தார். கோரிக்கைகளை விளக்கி விதொச மாநிலச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்டச் செயலாளர் டி. சலோமி, பொருளாளர் கே. சண்முகம், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர்கள் எம்.ஆர்.சுப்பையா, எஸ்.கலைச்செல்வன், விதொச மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பெருமாள், ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி உள்ளிட்டோர் பேசினர். போராட்ட முடிவில் வட்டாட்சி யர் கவியரசு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, காவல்  துணைக் கண்காணிப்பாளர் சிவ சுப்பிரமணியன் மற்றும் விதொச நிர்வாகிகள், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் மேற்படி மக்களுக்கு ‘இந்து ஆதியன்’ என  சாதிச் சான்றிதழ் வழங்கவும், அவர்கள் குடியிருந்துவரும் இடத் திற்கு மனைப்பட்டா வழங்கவும், மின்  இணைப்பு இல்லாத 3 வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வும், இங்கு வசிக்கும் அனைவ ருக்கும் ஆதார் அட்டை வழங்கவும்  விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.