கும்பகோணம்/புதுக்கோட்டை, ஜூலை 27 -
போக்குவரத்துத் தொழிலா ளர்கள் தங்களது 15-ஆவது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகின்றனர். இந்த நிலை யில் சிஐடியு சார்பில் புதுக்கோட்டை யில் வாயிற்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
சிஐடியுவின் கோரிக்கைகளில் பிரதானமானது அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட தொகை அரசு கழகங்களுக்க வழங்க வேண் டும் என்பதாகும். மேலும் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்தையை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி யுள்ளனர்.
கோரிக்கைகளை அரசின் கவ னத்திற்குக் கொண்டு செல்லும் அடிப் படையில் கும்பகோணத்தில் பிரச்சா ரம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கும்ப கோணம் மண்டலப் பொதுச்செய லாளர் மணிமாறன், நாகப்பட்டினம் மண்டலப் பொதுச்செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் சம்மேளனத் தலைவர் எம்.கண்ணன், பொருளாளர் ராம சாமி, துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன், கார்த்தி, அழகர்சாமி, வெங்கடாசலபதி, ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் வி.திருநாவுக்கரசு பாஸ்கர், தாமோதரன் ஆகியோர் பேசினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசுப் போக்கு வரத்துப் பணிமனை முன்பாக நடை பெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழிய சங்கத்தின் புதுக்கோட்டை மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். கோரிக்ககைகளை வலி யுறுத்தி மண்டலப் பொதுச் செய லாளர் ஆர்.மணிமாறன், பி.செந்தில் நாதன், எஸ்.சாமிஅய்யா, எம்.முத் துக்குமார், பி.லோகநாதன், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணி யன், வி.ஆனந்த் ஆனந்த் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து புதுக்கோட்டை போக்குவரத்துப் பணிமனையிலி ருந்து மண்டல அலுவலகம் நோக்கி போக்குவரத்துத் தொழிலாளர்களின் பேரணியாக வந்தனர்.