மயிலாடுதுறை, ஜூலை 5 - நூறுநாள் வேலையை அனைத்து ஊராட்சிகளிலும் உட னடியாக துவங்கிட வேண்டும். சட்டக்கூலி 319 ரூபாயை முழுமை யாக வழங்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்ட பணியில் தொழி லாளர்களுக்கு வேலை வழங்கு வதை உறுதிப்படுத்த வேண்டும். எந்திரங்களையும், ஒப்பந்த முறையையும் கைவிட வேண்டும். நூறுநாள் வேலையை 200 நாட்க ளாக்கி, தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வெள்ளியன்று மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நூறுநாள் வேலையை உடனடியாக துவங் கிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் டபிள்யூ.காபிரியேல் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின், மாவட்ட பொருளாளர் அ. ராஜேஷ், சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன் ஆகியோர் உரையாற் றினர். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உரை யாற்றினார். இப்போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கூலி தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். செங்கிப்பட்டி நூறு நாள் வேலையை தொ டர்ந்து வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் தெற்கு ஒன்றியம், செங்கிப் பட்டியில் ஊராட்சி மன்ற அலுவ லகத்தில் ஊராட்சி எழுத்தரிடம், தனித்தனியாக மனு கொடுக்கப் பட்டது. இந்நிகழ்வில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர் மற்றும் நிர்வாகி கள், கிளைச் செயலாளர்கள், நூறு நாள் வேலைத் திட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். கீழையூர் நூறு நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைத்து பய னாளிகளுக்கும், பாரபட்சமின்றி நூறு நாள் வேலை வழங்க வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மாவட் டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் கீழையூர் மேற்கு ஒன்றியச் செய லாளர் டி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து கண்டன உரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கே. சித்தார்த்தன், என்.பன்னீர்செல்வம், கே.டி.எம். சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் என்.பி.கண்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கீழையூர் கடைத் தெரு பகுதியில் இருந்து பேரணி யாக சுமார் 500-க்கும் மேற்பட் டோர் வந்து வட்டார வளர்ச்சி அலு வலகத்தில் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் வட்டார வளர்ச்சி அலு வலர் ஹரி கிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், மக்களின் கோரிக்கையை ஏற்று வேலை அட்டை (ஜாப் கார்டு) வைத்திருக்கும் அனைத்துப் பய னாளிகளுக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.