நாகர்கோவில், ஏப்.20- கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 65.45 சதவிகிதமும், இடைத்தேர்தல் நடந்த விள வங்கோடு சட்டமன்ற தொகுதியில் 65.19 சதவிகித வாக்குகளும் பதி வாகியுள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 57 ஆயி ரத்து 915 வாக்காளர்கள் உள்ள னர். இவர்கள் வாக்களிக்க 1698 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதியில் 65.45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் குறைவான அளவிலேயே வாக்கு கள் பதிவாகி உள்ளன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இங்கு நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக் கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலின் போது, கன்னி யாகுமரி நாடாளுமன்ற தொகு திக்கு இடைத்தேர்தலும் நடத்தப் பட்டது. அப்போது 68.80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் ஏப்ரல் 19 வெள்ளியன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 3.33 சதவீதம் வாக்குகள் குறைந்துள் ளது. 65.45 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளது. படித்தவர்கள் நிறைந்த மாவட் டம் என கூறப்படும் குமரி மாவட்டத் தில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்திலேயே குறைவான வாக்கு சதவீதம் என பட்டியலில் கடைசி இடத்தை கன்னி யாகுமரி நாடாளுமன்ற தொகுதி பெற்றுள்ளது. இதேபோல் விள வங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2021-இல் நடைபெற்ற தேர்தலில் 66.90 சதவிகிதம் வாக்குகள் பதிவா னது. ஆனால், இந்த தேர்தலில் 65.19 சதவிகித வாக்குகளே பதி வாகி இருந்தது. இது கடந்த தேர்தலை விட 1.71 சதவிகிதம் குறைவாகும். பெண் வாக்காளர்கள் அதிகம் சட்டமன்ற தொகுதிவாரியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி யில் அதிகபட்சமாக 69.59 சதவிகி தம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் குறைந்த பட்சமாக 62.93 வாக்குகள் பதிவாகி யுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 7,77,484 ஆண் வாக்கா ளர்களில் 488,973 பேர் வாக்களித்துள் ளனர். 7,80,288 பெண் வாக்கா ளர்களில் 5,30,738 பேர் வாக்களித்துள் ளனர். மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் 143 பேரில் 41 பேர் வாக்க ளித்துள்ளனர். மொத்த வாக்காளர் கள். 15 லட்சத்து 57 ஆயிரத்து 915 பேரில், 10 லட்சத்து 19 ஆயிரத்து 610 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அப்பர் கோதையாறில் 7 பேர் வாக்குப்பதிவு குமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சியில் 1 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதி அப்பர் கோதை யாறு ஆகும். இங்கு மின் உற்பத்தி நிலைய ஊழியர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 6 ஆண், 4 பெண் என 10 வாக்கா ளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த அப்பர் கோதையாறு மலைப்பகு திக்கு பேச்சிப்பாறையில் இருந்து சாலை வசதி இல்லை. அடர்ந்த காடு களும் மலைகளுமே உள்ளன. எனவே அதிகாரிகள், ஊழியர்கள் என 10 பேர் வாக்குப்பதிவு இயந்தி ரத்துடன் திருவட்டார் தாலுகா அலு வலகத்தில் இருந்து நாகர்கோவில், பணக்குடி, களக்காடு, கல்லிடைக் குறிச்சி, அம்பாசமுத்திரம். மணி முத்தாறு, மாஞ்சோலை வழியாக 175 கி.மீ. பயணித்து அப்பர் கோதை யாறு பகுதிக்கு சென்றனர். இந் நிலையில் அப்பர் கோதையாறு வாக்குச் வாடியில் வாக்கு பதிவு நடந்தது மொத்தம் உள்ள 10 வாக்காளர்களில் 7 பேர் மட்டுமே வாக்களித்தனர்.