திருவாரூர், ஏப்.9 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம், நகரப் பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக நாகை நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ், கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். குடவாசல் வடக்கு ஒன்றிய பகுதி யான கூத்தனூரில் திங்களன்று துவங்கிய பிரச்சாரப் பயணத்திற்கு, திமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ். ஜோதிராமன், பா.பிரபாகரன் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளரும், நன்னிலம் தொகுதி நாடாளுமன்ற பணிக்குழு செய லாளருமான ஜி.சுந்தரமூர்த்தி பிரச்சாரப் பயணத்தை துவக்கி வைத்து பேசி னார். இதில் வேட்பாளர் வை.செல்வ ராஜ், மருதவாஞ்சேரி, வடுகக்குடி, திரு விழிமிழலை, விஷ்ணுபுரம், எரவாஞ் சேரி, மணவாளநல்லூர் மற்றும் கூந்த லூர், கண்டிராமாணிக்கம், வடவேர் திரு விடைச்சேரி, புதுக்குடி, அன்னவாசல் உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து, கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். திங்களன்று மாலை குட வாசல் பேரூராட்சிப் பகுதியிலும், வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் மற்றும் பள்ளிவாசல் வீதியிலும் வாக்குச் சேகரித் தார். இந்தப் பிரச்சாரம் காங்கேய நகரத்தில் நிறைவு பெற்றது. சென்ற இடமெல்லாம் வேட்பாளருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தில் நாகை நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கே.கலைவாணன், சிபிஎம் குட வாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கே. ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய செய லாளர் எம்.கோபிநாத், குடவாசல் நகர செயலாளர்கள் டி.ஜி.சேகர் (சிபிஎம்), ஏ.கே.டி.சேரன்(திமுக) உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட னர்.