மயிலாடுதுறை, டிச.15 - உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் உலக மனித உரிமைகள் தினம் ஆகிய வற்றையொட்டி, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் கலங்கரை சமூக செயல்பாட்டு மையம் சார்பில் விதவைப் பெண்கள் வாழ்வு ரிமை சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவி கஸ்தூரி தலைமை வகித்தார். சமூக பணிகள் இயக்குநர் பிரான்சி சேவி யர், மைய இயக்குநர் குழந்தைசாமி, பொறுப்பாளர் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள ஒருங்கி ணைப்பாளர் ராபின் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் பி. சுகந்தி, மாவட்ட சமூக நலத்துறையை சேர்ந்த தீபா ஆகியோர், விதவைப் பெண்களின் வாழ்வுரிமை பற்றி சிறப்புரையாற்றினர். சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024-ஐ வெளியிட்ட தமிழக அரசுக்கு கைம்பெண்கள் நலச் சங்கத்தின் சார்பாக நன்றி தெரி வித்துக் கொள்வது. விதவைப் பெண் களுக்கான உதவித்தொகையை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக நலத்துறை இருப்பதுபோல, மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் கைம் பெண்களுக்கும் தனியாக ஒரு நலத்துறையை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கி 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நல வாரியத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்ப டுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும். கைம்பெண் கள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். வீடு இல்லாத கைம்பெண்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு வீட்டு மனையும், கோயில் இடங்கள் மற்றும் புறம்போக்கு இடங்களில் வாழும் கைம்பெண்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் கைம்பெண் கள் மதிக்கப்படுவதுடன், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மேற்கண்ட கோரிக் கைகளை வலியுறுத்தி செம்பனார்கோ யில் மேல முக்கூட்டில் இருந்து ஏராள மான பெண்கள் விழிப்புணர்வு பேரணி யாக, கீழக்முக்கூட்டு பகுதிக்கு வந்த டைந்தனர். நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜெசி மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.