districts

img

உதகை கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கிராமங்கள் துண்டிப்பு

உதகை, ஜூலை 1- நீலகிரி மாவட்டத்தில், பெய்து வரும் தொடர் கனமழையின் காரண மாக 10க்கும் மேற்பட்ட குக் கிரா மங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு  சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை நீல கிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த மூன்று நாட்க ளுக்கு மேலாக கன மழை பெய்து  வருவதால், மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதித்துள்ளது.  நீலகிரி மாவட்டம், பாடந் தொரை பகுதியில் பெய்த கனமழை யால் ஆலவயல் சாலை, கனியம்வ யல் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து  போக்குவரத்து தடைபட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள ஆவின் பால்  கொள்முதல் நிலையம் முற்றிலு மாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள தால் பணியாளர்கள் பால் கேன் களை கொண்டு செல்வதில் பெரும்  சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, பந்தலூர் பஜார்  பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளத் தால் சூழப்பட்டு ஆறு போல காட்சி யளிக்கிறது. இதனால், அப்பகுதில்  நீண்ட நேரம் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. மேலும், தேவாலா - கரிய சோலை சாலையில் பில்லுக்கடை  அருகே ஏற்பட்ட மண்சரிவால் அந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், தொடர்ந்து மழை  பெய்து வருவதால் 15க்கும் மேற் பட்ட குக் கிராமங்களில் சாலை கள் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் அறுவடைக்கு தயார்  நிலை யில் இருந்த வாழைக்காய் இஞ்சி பல லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த  தொடர் கனமழை காரணமாக கூட லூர், பந்தலூர் தாலுகா விற்குட்பட்ட பள்ளிகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பந்தலூர்  வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி கூறி யதாவது, பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 15க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு  ஏற்பட்டுள்ளது. சுமார் 50 பேர் முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். நீலகிரி மாவட்டத்தில், திங்க ளன்று காலை வரை பதிவான மழை நிலவரம், பந்தலூர் 62, கூடலூர் 45, கீழ் கோத்தகிரி 31, தேவாலா 46, சேரங்கோடு 128, அவிலாஞ்சி 18,  பாடந்துறை 134, ஓவேலி 39, அப்பர்  பவானி 16, செருமுள்ளி 133 மி.மீ.,  மழை பதிவாகியுள்ளது.