நாகர்கோவில், பிப்.15 - மதுரை - புனலூர் ரயில் எண் 16729/16730, குழித்துறை மேற்கு மற்றும் பள்ளியாடியில் ரயில் நிறுத் தங்களில் நிறுத்தம் வேண்டும் எனவும் அதே போல் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 22503/22504 நாகர்கோவில் ரயில் நிலையத்திலி ருந்து புறப்பட்டு அடுத்த நிறுத்தம் திருவனந்தபுரம் சென்ட்ரலில் தான் நிறுத்தம் உள்ளது. இடையில் நிறுத்தம் இல்லாதால் பள்ளியாடி, குழித்துறை, மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வரும் சாதாரண மக்கள் மற்றும் ஆயு தப்படை பணியாளர்கள் ,ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள், வயதான பெற்றோர்களு டன் பயணம் செய்ய நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் சென்று தான் பயணிக்க வேண்டி உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மதுரை - புனலூர் விரைவு ரயிலுக்கு குழித்துறை மேற்கு மற்றும் பள்ளியாடி நிலையங்களில் நிறுத்தம் வழங்குமாறும், மேலும் ரயில் எண் 16366/06435 நாகர்கோ வில் கோட்டயம் ரயில் நாகர்கோவில் நகரம், பள்ளியாடி மற்றும் குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நிறுத்தம் வேண்டும் எனவும் ராணுவ வீரர்க ளுக்கு வசதியாக, குழித்துறை ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறும் தென்னக ரயில்வே யின் முதன்மை இயக்க மேலாளர் அவர்களை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி மனு அளித்தார். அதே போல் தென்னக ரயில்வே யின் தலைமை வணிக மேலாளரை சந்தித்து நாகர்கோவில் டவுண் ரயில்வே நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரயில்கள் வருகை குறித்த ரயில்வே விசாரணை கவுண்டர் அமைக்க வேண்டும், ரயில் நிலைய முகப்பு பகுதி நவீன முறையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் மேலும் பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் குறித்தும் கோரிக்கை மனு அளித்தார்.